Tamil Reading 8th Std Page-1

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

வாழ்த்து

முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே 
சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே 
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த 
விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே 
- தாயுமானவர்

சொற்பொருள்:

  • சுடர் – ஒளி
  • ஆனந்தம் – மகிழ்ச்சி
  • பராபரம் – மேலான பொருள், இறைவன்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = தாயுமானவர்
  • பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
  • பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
  • மனைவி = மட்டுவார்குழலி
  • ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
  • நூல் = தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
  • பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
  • காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு
  • நினைவில்லம் = இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது

நூல் குறிப்பு:

  • இப்பாடல் “தாயுமானவர் திருப்பாடல் திரட்டு” என்னும் நூலில் “பராபரக்கண்ணி” என்னும் தலைப்பில் உள்ளது.

திருக்குறள்

சொற்பொருள்:

  • வினை - செயல்
  • காப்பு - காவல்
  • நீரவர் - அறிவுடையார்
  • கேண்மை - நட்பு
  • நவில்தொறும் - கற்கக்கற்க
  • நயம் - இன்பம்
  • நகுதல் - சிரித்தல்
  • கிழமை - உரிமை
  • அகம் - உள்ளம்
  • ஆறு - நல்வழி
  • உய்த்து - செலுத்தி
  • உடுக்கை - ஆடை
  • கொட்பின்றி - வேறுபாடு இல்லாமல்
  • புனைதல் - புகழ்தல்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = திருவள்ளுவர்
  • வேறுபெயர்கள் = முதற்பாவலர், பொய்யில் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார்
  • காலம் = கி.மு. 31ம் நூற்றாண்டு

சிறப்பு;

  • பாரதியார் இவரை
    “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு” என்றார்.
  • பாரதிதாசன் இவரை
    “ வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்றார். 

நூல் குறிப்பு:

  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • குறள் வெண்பாக்களால் ஆனதால், குறள் எனவும், மேன்மை கருதி திரு என்னும் அடைமொழியுடன் திருக்குறள் எனவும் அழைக்கப்பெறுகிறது.
  • இது “உலகப்பொதுமுறை” என போற்றப்படுகிறது.
  • வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல் முதலிய பெயர்களும் இதற்கு உண்டு.

நூல் சிறப்பு:

  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
  • இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் வளர்த்த சான்றோர்

தமிழ் வளர்த்த சான்றோர்:

  • புதுக்கவிதைக்கு = பாரதியார்
  • சமுதாய புரட்சிக்கு = பாரதிதாசன்
  • பொதுவுடைமை = திரு.வி.க
  • தனித்தமிழுக்கு = மறைமலையடிகள்
  • பேச்சுக்கலை = அறிஞர் அண்ணா
  • சிறுகதை = புதுமைப்பித்தன்

வீரமாமுனிவர்(1680 – 1747):

  • இவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
  • இவரின் இயற்பெயர் “கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி”.
  • இவர் தம் முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார்.
  • தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை “தைரியநாதன்” என மாற்றிகொண்டார்.
  • பின்னர் தனித்தமிழுக்கு ஏற்ப “வீரமாமுனிவர்” என மாற்றம் பெற்றது.

சதுரகராதி, தேம்பாவணி:

  • தமிழில் முதன்முதலாக “சதுரகராதி” என்னும் அகரமுதலியை படைத்தார்.
  • கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் “தேம்பாவணி” என்னும் காப்பியத்தை படைத்தார்.

எழுத்து சீர்திருத்தம்:

  • தமிழ் எழுத்து வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.

குட்டித் tholkaதொல்காப்பியம்:

  • குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படும் “தொன்னூல் விளக்கம்” படைத்தார்.

பிற நூல்கள்:

  • கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும், பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலையும் படைத்தார்.

ரா.பி.சேதுபிள்ளையின் பாராட்டு:

  • “தேம்பாவணி, காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்.

குணங்குடி மஸ்தான்(1788 – 1835):

  • “மாதவஞ்ச்சேர் மேலோர் வழுத்தும் குனங்குடியான்” என்று அழைக்கப்படுபவர்.
  • இயற்பெயர் = குணங்குடி மஸ்தான் சாகிபு.
  • இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.

தாயுமானவர் மீது பற்று:

  • இவர் தாயுமானவர் பாடல்கள் மீட்கு பெரிதும் பற்று கொண்டவர்.
  • அவருடைய பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
  • பராப்பரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில கண்ணிகள்.

அழியாப் பேரின்பம்:

  • இவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்.
  • இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.

நான்மணிமாலை:

  • இவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள் நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.
  • அந்நூலில் “மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல்சூழ்பவரின், குனங்குடியான், மிக்கோன் எனற்குஓர் தடையுளதோ?” எனக் கேட்கிறார்.
  • “தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை” என்கிறார்.

ஆறுமுக நாவலர்(1822 – 1879):

  • இவர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
  • இயற் பெயர் = ஆறுமுகனார்.
  • இளமையிலே சைவ சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர்.

நாவலர் பட்டம்:

  • இவரின் சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு “நாவலர்” பட்டம் வழங்கினார்.
  • இவர் சிறந்த பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்.

இலக்கண வலுவற்ற தூய்மை:

  • நாவலரே முதன் முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையை கையாண்டார்.

பரிதிமாற் கலைஞர் பாராட்டு:

  • தமிழ் உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பருதிமார் கலைஞர் இவரை “வசன நடை கைவந்த வல்லாளர்” என பாராட்டினார்.

அச்சுக்கூடம் நிறுவுதல்:

  • சென்னையில் அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல பதிப்பித்தார்.
  • பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற இலக்கிய நூல்களை பதிப்பித்தார்.
  • இலக்கண வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கண கொத்து, இலக்கண சூறாவளி முதலிய இலக்கண நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.
  • முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.

ஜி.யு.போப்

பிறப்பு:

  • பெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  • பிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  • பிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி
  • பெற்றோர் = ஜான் போப், கேதரின் போப்

ஹென்றி:

  • போப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்துவமதத்தைப் பரப்பும் சமய குருவாகப் பணியாற்றினார்.
  • அவரைப்போன்று பணியாற்ற விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம் வந்தார்.
  • அவர் பாய்மரக் கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.

முதல் சமயப்பணி:

  • தமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார்.

திருநெல்வேலி – சாயர்புரம்:

  • திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார்.
  • அங்கு பள்ளிகளை நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
  • சமயக்கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின், எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
  • கணிதம், அறிவாய்வு(தருக்கம்), மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • திருநெல்வேலியில் 1842 முதல் 1849 வரை பணியாற்றினார்.

திருமணம்:

  • 1850இல் இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.

தமிழ் இலக்கிய ஆர்வம்:

  • தஞ்சையில் பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல் முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
  • அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

ஏடுகளில் தமிழ் பணி:

  • “இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு” போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
  • அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.

தமிழ் செய்யுட் கலம்பகம்:

  • போப் உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600 செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து,  “தமிழ் செய்யுட் கலம்பகம்” என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ் பாடநூலின் முன்னோடி:

  • பள்ளி குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
  • பெரியவர்கள் கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
  • மேலை நாட்டார் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் “தமிழ்-ஆங்கில அகராதி” ஒன்றையும், “ஆங்கிலம்-தமிழ் அகராதி” ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
  • பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க ஏற்பாடு செய்தார்.

உதகை:

  • 1858ஆம் ஆண்டு உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தமிழ்த்தொண்டு:

  • இங்கிலாந்திற்கு சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
  • திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து செப்டம்பர் 1, 1886ஆம் ஆண்டு வெளியிட்டார்.
  • தமது 86ஆம் வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.

தமிழ் மாணவன்:

  • 13.02.1908 அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
  • அவர், தம் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில் எழுதி வைத்தார்.
  • அவர் தன்னை “தமிழ் மாணவன்” என்றே தம்மை கூறிக்கொண்டார்.

இனியவை நாற்பது

சலவரைச் சாரா விடுதல் இனிதே
புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
தகுதியால் வாழ்தல் இனிது
-பூதந்சேந்தனார்

சொற்பொருள்:

  • குழவி – குழந்தை
  • பிணி – நோய்
  • மாறி – மயக்கம்
  • கழரும் – பேசும்
  • சலவர் – வஞ்சகர்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்
  • ஊர் = மதுரை
  • காலம் = கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • நன்மைத்தரும் இனிய கருத்துகளை நாற்பது பாடல்களில் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது.

தமிழ்ப்பசி

சொற்பொருள்:

  • குவை – குவியல்
  • மாறன் – மன்மதன்

ஆசிரியர் குறிப்பு:


  • இயற்பெயர் = க.சச்சிதானந்தன்
  • ஊர் = இலங்கையில் யாழ்ப்பான மாவட்ட பருத்தித்துறை
  • பணி = ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி
  • புலமை = தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை
  • படைப்புகள் = ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி-1954), அன்னபூரணி(புதினம்), யாழ்பானக்காவியம்
  • சிறப்பு = மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.