tamil-7th-std-reading-pages-3

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

தனிப்பாடல் - இரட்டுறமொழிதல்

சொற்பொருள்:

  • சுழி – உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
  • துன்னலர் – பகைவர், அழகிய மலர்
  • சாடும் – தாக்கும், இழுக்கும்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர்: காளமேகப்புலவர்
  • பிறந்த ஊர்: கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.
  • இயற்பெயர்: வரதன்
  • பணி: திருவரங்க மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார்.

பெயர் காரணம்:

  • “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.

நூல் குறிப்பு:

  • புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே “தனிப்பாடல் திரட்டு”. இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, சந்திரசேகர கவிராசப் பண்டிதர் தமிழகம் முழுவதம் சென்று தேடித் தொகுத்தார்.

கல்விக்கு எல்லை இல்லை

கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று) 
உத்தர கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த 
வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர் 
எறும்புந்தன் கையால்எண் சாண் 
- ஔவையார்

சொற்பொருள்:

  • கைம்மண்ணளவு – ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
  • மெத்த – மிகுதியாக
  • புலவீர் – புலவர்களே
  • கலைமடந்தை – கலைமகள்

ஆசிரியர் குறிப்பு:

  • இங்கு குறிப்பிடும் ஔவையார், சங்க கால அவ்வையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஓட்டகூதர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.

காந்தி கடிதம்

  • 1917ஆம் ஆண்டு புரோச் நகரில் நடைபெற்ற இரண்டாவது  கல்வி மாநாட்டில் காந்தியடிகள் நிகழ்த்திய தலைமை உரை, மாணவர்களக்கு ஏற்ற வானம் கடித வடிவில் அமைகப்பட்டுள்ளது.
  • பயிற்று மொழி பற்றிய நிறைவான முடிவிற்கு வருவதை பற்றிய நோக்கம்.
  • பயிற்றுமொழி குறித்து சிந்திக்காமல் கல்வி கற்பிப்பது, அடித்தளம் இல்லாமல் கட்டடத்தை எழுப்புவதை போன்றது என்கிறார்.
  • கவி இரவிந்த்ரநாத் தாகூரின் இர்பான இலக்கிய நடையின் உயர்விற்குக் காரணம் ஆங்கிலத்தில் அவருக்கு உள்ள அறிவு மட்டுமன்று, தம்முடைய தாய்மொழியில் அவருக்கு இருந்த பற்றும் தான்.
  • முன்சிராம் பேசும் பொது குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கேட்பதற்கு காரணம் அவர்தம் தாய்மொழி அறிவே.
  • மதன்மோகன் மாளவியாவின் ஆங்கில பேச்சு வெள்ளியைப்போல் ஒளிவிட்டாலும், அவரின் தாய்மொழிப் பேச்சு தங்கதிப் போன்று ஒழி வீசுகின்றது.
  • தாய்மொழியை வளமுறச் செய்வதற்கு தேவையானது, தங்கள் தாய்மொழியில் உள்ள அன்பும் மதிப்பும்தான்.
  • மக்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால், அவர்தம் மொழியும் அவ்வாறே அமையும்.
  • தாய்மொழியில் மூலம் நமக்குத் கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றிஇருப்பார்கள்.
  • பள்ளிக்கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும்.
  • தாய்மொழியைக் கற்பித்தல் மொழியாக வைத்துக்கொண்டால், ஆங்கிலத்தில் அறிவைப் பெறுவது பாதிக்கப்படுமா, இல்லையா என்பதை பற்றி சிந்தனை செய்ய வேண்டியது இல்லை என்கிறார்.
  • தாய்மொழியில் அறிவை பெறுவதே சிறந்தது என்கிறார்.

திருவாரூர் நான்மணிமாலை

என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில்
முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் – அன்புஎன்னாம்
புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார்
மண்சுமந்தார் என்றுருகு வார்.
- குமரகுருபரர்

சொற்பொருள்:

  • என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த
  • தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர்
  • பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர்
  • புண்ணியனார் – இறைவன்

ஆசிரியர் குறிப்பு:

  • ஆசிரியர்: குமரகுருபரர்
  • பெற்றோர்: சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாமசுந்தரி அம்மையார்
  • ஊர்: திருவைகுண்டம்

இயற்றிய நூல்கள்:

  • நீதிநெறிவிளக்கம், முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ், கந்தர்கலி வெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம்.

காலம்:

  • கி.பி.பதினாறாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

  • திருவாரூர் + நான்கு + மணிமாலை = திருவாரூர் நான்மணிமாலை.
  • இது திருவாரூரில் எழுந்தருளியுள்ள தியாகராசர் மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப் பொருள்படும். நான்மணிமாலை என்பது தமிழில் வழங்கும் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம் என்னும் நால்வகையான மணிகளால் ஆனா மாலையைப் போன்று நால்வகையான பாடல்களால் (வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா) ஆனா நாற்பது செய்யுள்களை கொண்டது.

மெய்பொருள் கல்வி

கற்பிப்போர் கண்கொடுப் போரே! – அந்தக்
கணக்காயர் உரையினில் இருசெவி சேரே!
நற்பெயர் எடுத்திட வேண்டும்! – நாளும்
நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்!
- வாணிதாசன்

சொற்பொருள்:

  • பதுமை – உருவம்
  • மெய்பொருள் – நிலையான பொருள்
  • கணக்காயர் – ஆசிரியர்

ஆசிரியர் குறிப்பு:

  • இயற்பெயர்: எத்திராசலு (எ) அரங்கசாமி
  • பெயர்: வாணிதாசன்
  • பிறந்த இடம்: புதுவையை அடுத்த வில்லியனூர்
  • பெற்றோர்: அரங்க திருக்காமு – துளசியம்மாள்

சிறப்பு:

  • “கவிஞரேறு, பாவலர்மணி” என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
  • தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என இவரைத் தமிழுலகம் புகல்கிறது.
  • உருசியா, ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

காலம்:

  • 22.07.1915 – 07.08.1974

நூல் குறிப்பு:

  • கவிஞர் வாணிதாசன் தமிழ் உலகிற்குப் புனைந்து அளித்துள்ள “குழந்தை இலக்கியம்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

தூங்கா நகர்

மதுரை நகரின் சிறப்புப் பெயர்கள்:

தூங்கா நகர், திருவிழா நகர், கோவில் நகர், பழம்பெரும் தமிழரின் நாகரீக தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கூடல் நகர், ஆலவாய்

மதுரை – பெயர்க்காரணம்:

  • “மதுரை” என்னும் சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. மதுரை பற்றி புலவர்கள் கூறும் போதெலாம் தமிழோடு சேர்த்தே கூறினர்.

புறநானூறு

  • தமிழ்கெழு கூடல்

சிறுபாணாற்றுப்படை:

“தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை”
-சிறுபாணாற்றுப்படை(நல்லூர் நத்தத்தனார்)

சிலப்பதிகாரம்:

“ஓங்குசீர் மதுரை”
“மதுரை மூதூர் மாநகர்”
“தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை”
“மாண்புடை மரபின் மதுரை”
“வானவர் உறையும் மதுரை”
“பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்”

தமிழகத்தின் சிறப்பு:

சேரநாடு – வேழமுடைத்து
சோழநாடு – சோறுடைத்து
பாண்டியநாடு – முத்துடைத்து
தொண்டைநாடு – சான்றோர் உடைத்து

நான்மாடக்கூடல்:

  • மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் உள்ளன.
  • நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவி உள்ளது.
  • “திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்” ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர்.
  • “கன்னிக்கோவில், கரியமால் கோவில், காளிக்கோவில், ஆலவாய்க் கோவில்” ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்தமையால், “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் வந்தது என்றும் கூறுவர்.

பரஞ்சோதியார் கூற்று:

  • வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப் பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாக கூடி மதுரையைக் காத்தமையால் “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் ஏற்பட்டதாக பரஞ்சோதியார் கூறியுள்ளார்.

அறிஞர்கள் கூற்று:

  • எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடும் வளமான நகர் என்பதால், கூடல் எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
  • சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லோரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாக அறிஞர் கூறுவர்.

ஆலவாய் – திருவிளையாடற புராணம் கூற்று:

  • மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு வாழை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் “திருவிளையாடற்புராணம்” கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும்.

வேறு காரணம்:

  • மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் “ஆலவாய்” என்னும் பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.

மருதை – மதிரை:

  • மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் “ம்ஸ்ருதை” என வழங்கிய இடம், காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் “மதிரை” என்ற பெயர் காணப்படுகிறது.

மதுரை நகரமைப்பு:

  • மதுரை நகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றன.

மதுரை வீதிகளின் பெயர்கள்:

அறுவை வீதி - ஆடைகள் விற்கும் கடைப்பகுதி
கூலவீதி - தானியக்கடை
பொன்வீதி - பொற்கடைகள்
மன்னவர் வீதி - மன்னர் வாழும் பகுதி
மறையவர் வீதி - அந்தணர் வீதி

மதுரையின் மாண்பு:

  • சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப்பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகவும் மதுரையை ஆண்டனர்.
  • அரிமர்த்தன பாண்டியனக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார்.
  • திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச் சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார்.

திருமலை நாயக்கரின் திருப்பணிகள்:

  • திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்.
  • கோடை விடுதியான தமுக்கமும், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக் குளமும், கலை நயத்தில் “தாஜ்மகாலை” ஒத்த “திருமலை நாயக்கர் மகாலை”யும் அமைத்து மதுரையை அழகுபடுத்தினார்.
  • மதுரையை “விழ மல்கு நகராக” மாற்றினார்.

நிகழ்வுகள்:

  • பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம் தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறுகிறது.
  • மதுரைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் “நாலடியார்” இயற்றப் பெற்றது.
  • குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தார்.

நான்காம் தமிழ்ச்சங்கம்:

  • வள்ளல் பாண்டித்துரை தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தனர்.

கோவலன் பொட்டல்:

  • சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் “கோவலன் பொட்டல்” என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களிடம் வழங்கப்படுகிறது.

செல்லத்தம்மன் கோவில்:

  • கையில் சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில், செல்லத்தம்மன் கோவிலாக இன்றும் மக்களால் வழிபடப்படுகிறது.

பொதுவான குறிப்பு:


  • மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது கிழக்குக் கோபுரம்; உயரமானது தெற்குக் கோபுரம். இது 16௦0.9 அடி உயரமும் 1511 சுதை உருவங்களும் .
  • மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால். இதன் ஒவ்வொரு தூணும் 82 அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.