Tamil Reading pages 9 th std

kalvipriyan Online Test January 2018 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan




கடவுள் வாழ்த்து

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அழகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே
- கம்பர்

சொற்பொருள்:




  • உளவாக்கல் – உண்டாக்குதல், படைத்தல்
  • நீக்கல் – அழித்தல்
  • நீங்கலா – இடைவிடாது
  • அலகிலா – அளவற்ற
  • அன்னவர் – அத்தகைய இறைவர்
  • சரண் – அடைக்கலம்





  • இலக்கண குறிப்பு:

  • யாவையும் – முற்றும்மை
  • ஆக்கல், நீக்கல், விளையாட்டு – தொழிற் பெயர்
  • அலகிலா – ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்


  • ஆசிரியர் குறிப்பு:





  • நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் கம்பர் பிறந்தார்.
  • இவர் ஏர் எழுபது, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
  • இவர் குலோதுங்கச்சோழனின் அவைப் புலவராக விளங்கினார்.
  • திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர்.
  • கவிச்சக்ரவர்த்தி என்றும் கல்வியில் பெரியவர் கம்பர் என்றும் போற்றப்பட்டார்.
  • இவரின் காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.

  • நூல் குறிப்பு:





  • வடமொழியில் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் கம்பர் எழுதியதே கம்பராமாயணம்.
  • கம்பர் இந்நூலுக்கு இட்ட பெயர் = இராமாவதாரம்.
  • இது பால காண்டம், அயோத்திய காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.



  • திருக்குறள்

    சொற்பொருள்:




  • அகழ்வாரை – தோண்டுபவரை
  • தலை – சிறந்த பண்பு
  • பொறுத்தல் – பொறுத்துக்கொள்ளுதல்
  • இறப்பு – துன்பம்
  • இன்மை – வறுமை
  • ஒரால் – நீக்குதல்
  • மடவார் – அறிவிலிகள்
  • விருந்து – வீட்டிற்கு புதியவராய் வந்தவர்
  • நிறை – சால்பு
  • ஒறுத்தாரை – தண்டித்தவரை
  • போன்றும் – உலகம் அழியும்வரை
  • நோநொந்து – துன்பத்திற்கு வருந்தி
  • மிக்கவை – தீங்குகள்
  • தகுதியான் – பொறுமையால்
  • துறந்தார் – பற்றற்றவர்
  • இன்னா – தீய





  • இலக்கான குறிப்பு:

  • பொறுத்தல் – தொழிற்பெயர்
  • அகல்வார், இகழ்வார் – வினையாலணையும் பெயர்
  • மறத்தல், பொறுத்தல் – தொழிற்பெயர்
  • நன்று – குறிப்பு வினைமுற்று
  • விருந்து – பண்பாகு பெயர்
  • ஒரால், நீக்குதல் – தொழிற்பெயர்
  • நீங்காமை – எதிர்மறைத் தொழிற்பெயர்
  • ஒருத்தார் – வினையாலணையும் பெயர்
  • பொதிந்து – வினையெச்சம்
  • வையார் – வினைமுற்று
  • ஒருத்தார், பொறுத்தார் – வினையாலணையும் பெயர்
  • தற்பிறர் – ஏழாம் வேற்றுமைத் தொகை
  • செய்யினும் – இழிவு சிறப்பும்மை
  • நொந்து – வினையெச்சம்
  • அரண், திறன் – ஈற்றுப்போலிகள்
  • விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
  • இறந்தார் – வினையாலணையும் பெயர்
  • உண்ணாது – வினையெச்சம்

  • ஆசிரியர் குறிப்பு:





  • இவர் நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, பெருநாவலர் என்னும் சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுவார்.
  • இவரின் காலம் கி.மு.31ஆம் நூற்றாண்டு என்று கூறுவர்.

  • நூல் குறிப்பு:





  • திரு + குறள் = திருக்குறள்
  • திரு = செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை எனப் பல பொருள் உண்டு.
  • குறள் = குறுகிய அடி உடையது.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பெரும் பிரிவுகளை கொண்டது.
  • அறம் 38 அதிகாரங்களாகவும், பொருள் 70 அதிகாரங்களாகவும், இன்பம் 25  அதிகாரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலை போற்றிப் பாராட்டிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை.

  • திராவிட மொழிகள்

    மொழிகள்:





  • தனக்கென தனிச் சிறப்பும், பல மொழிகள் தோன்றிவளர அடிப்படையாகவும் உள்ள மொழி = மூலமொழி
  • மூலமொழியில் இருந்து தோன்றி வளர்ந்த மொழிகள் = கிளைமொழிகள்.

  • இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு:





  • இந்தியாவில் மொத்தம் பனிரெண்டு மொழிக்குடும்பங்கள் உள்ளன.
  • அவற்றுள், 325 மொழிகள் பேசப்படுவதாக இந்திய மானிடவியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.

  • இந்தியமொழிக் குடும்பங்கள்:





  • இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்தையும் “இந்தோ-ஆசிய மொழிகள், திராவிட மொழிகள், ஆஸ்திரோ-ஆசிய மொழிகள், சீன-திபெத்திய மொழிகள்” என அடக்குவர்.
  • நம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட மொழிகளும், அதன் கிளைமொழிகளும் பேசப்பட்டு வருகின்றன.

  • மொழிகளின் காட்சிசாலை;





  • மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம் இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிசாலை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • திராவிட மொழிக் குடும்பங்கள்:

    தென்திராவிட மொழிகள் நடுத்திராவிட மொழிகள் வடதிராவிட மொழிகள்
    தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பொங்கோ, ஜதபு குரூக், மால்தோ, பிராகுய்
    திராவிட பெரு மொழிகள் = தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

    திராவிடம்:





  • திராவிடர் பேசிய மொழியே திராவிட மொழியாகும்.
  • திராவிடம் என்னும் சொல் திராவிடநாடு எனும் பொருளைத் தரும்.
  • திராவிடம் என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர் = குமாரிலபட்டர்.
  • திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் என்னும் சொல் பெயரடையாக வந்துள்ளது எனக் கால்டுவெல் கூறியுள்ளார்.
  • கால்டுவெல் திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

  • கால்டுவெல் கூற்று:





  • தமிழையும் அதன் கிளைமொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளை ஒரு காலத்தில் தமிளியன்(tamilian) அல்லது தமுலிக்(tamulic) என்றழைத்தனர்.
  • அவற்றுள் தமிழ், மிகுந்த சிறப்பும் பழமையும் பெற்ற மொழியே எனினும், பல திராவிட மொழிகளில் அதுவும் ஒன்று.
  • எனவே, இவ்வினமொழிகள் அனைத்தையும் “திராவிட” எனும் சொல்லைத் தாம் கையாண்டதாகத் கால்டுவெல் கூறியுள்ளார்.

  • ஈராஸ் பாதிரியார் கூற்று:





  • திராவிட என்னும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானது.
  • தமிழ் -> திரமிள -> திரவிட -> திராவிட என உருவாயிற்று எனக் கூறுகிறார் மொழியியல் அறிஞர் ஈராஸ் பாதிரியார்.
  • திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியை தான் குறிக்கும் என்கிறார்.

  • தலைமைச் சிறப்பு:





  • திராவிட மொழிகள் அனைத்திற்கும் மூலமான மொழியை “முன்னைத் திராவிட மொழி, மூலத் திராவிட மொழி, தொன்மைத் திராவிட மொழி” எனப் பல்வேறு சொற்களால் குறிப்பர்.
  • இம்மூலமொழியாக முதன்முதலில் தனித்து வளர்ந்த மொழி தமிழ்.
  • மற்ற திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிறந்தவை.
  • என்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொளிக்கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிட மொழி தமிழ்.

  • சிறுபஞ்சமூலம்

    கணவனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
    எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் – பண்வனப்புக்
    கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னோடு
    வட்டான்நன் றென்றால் வனப்பு
    - காரியாசான்

    சொற்பொருள்:





  • கண்ணோட்டம் – இறக்கம் கொள்ளுதல்
  • எண்வனப்பு – ஆராய்சிக்கு அழகு
  • வேந்தன் – அரசன்

  • இலக்கணக்குறிப்பு:





  • கணோட்டம், செல்லாமை, உறைதல், என்றல் – தொழிற்பெயர்கள்
  • கேட்டார், வாட்டான் – வினையாலணையும் பெயர்

  • ஆசிரியர் குறிப்பு:





  • காரியாசான் மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
  • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
  • இவரும் கணிமேதவியாரும் ஒருசாலை மாணாக்கர்.

  • நூல் குறிப்பு:





  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூலில் கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள் உள்ளன.

  • கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி




  • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து அறக்கருத்துகள் உள்ளன.

  • பாஞ்சாலி சபதம்


    சொற்பொருள்:





  • எம்பி – என் தம்பி
  • மடப்பிடி – பாஞ்சாலி
  • கோமான் – அரசன்
  • நுந்தை – நும் தந்தை
  • அடவி – காடு
  • தடந்தோள் – வலியதோள்
  • மருங்கு – பக்கம்
  • கா – காடு
  • குலவு – விளங்கும்
  • பண்ணவர் – தேவர்
  • அரம்பையர் – தேவமகிளிர்
  • வீறு – வலிமை

  • இலக்கணக்குறிப்பு:





  • அழைத்தனன் – முற்றெச்சம்
  • மாநகர் – உரிச்சொற்றொடர்
  • சார்ந்தவர் – வினையாலணையும் பெயர்
  • நுந்தை – நும் தந்தை என்பதன் மரூஉ
  • அடவிமலையாறு – உம்மைத்தொகை
  • கடந்து – வினையெச்சம்
  • தடந்தோள் – உரிச்சொற்றொடர்
  • செறிந்து, பாய்ந்து – வினையெச்சம்
  • பாலாடையும் நறுநெய்யும் தேனும் – எண்ணும்மை
  • நீளமுடி, நன்செய், புன்செய் – பண்புத்தொகை
  • காத்தல் – தொழிற்பெயர்
  • தொல்லுலகு – பண்புத்தொகை
  • தாளமும் மேளமும் – எண்ணும்மை
  • பதமலர் – உருவகம்

  • ஆசிரியர் குறிப்பு:





  • சுப்ரமணிய பாரதியார், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் 11.09.1882 அன்று பிறந்தார்.
  • இவர்தம் பெற்றோர் சின்னசாமி – இலக்குமி அம்மையார்.
  • இவரின் துணைவியார் செல்லம்மாள்.
  • இவர் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களை படைத்துள்ளார்.
  • ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
  • இவர் 11.12.1921 அன்று மறைந்தார்.

  • நூல் குறிப்பு:





  • பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது.
  • பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது.
  • இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது.

  • சிறப்பு:





  • பாரதியார் “பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி” என்றேல்லாம் புகப்பெற்றார்.
  • சுதேசமித்திரன், இந்திய முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.
  • இக்காலக் கவிதைகள்

    உரைநடைக் காலம்:

  • இருபதாம் நூற்றாண்டை “உரைநடைக் காலம்” என்பர்.
  • எனினும் கவிதை வடிவமும் கவினுற வளர்ந்து வந்தது.
  • பாரதியார்:



  • பாரதியாரின் கவிதைகள் இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக இருந்தது.
  • மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும்.

  • பாரதிதாசன்:



  • தமிழ், தமிழர், தமிழுணர்வு, சமுதாய மறுமலர்ச்சி, பெண்ணடிமை, திராவிட இயக்கச் சிந்தனை, பொதுவுடைமை முதலியவற்றை பாரதிதாசன் கவிதைகள் வெளிப்படுத்தின.
  • “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
  • இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”

  • கவிமணி:



  • கவிமணியின் கவிதைகள் கற்போரைக் களிப்பில் ஆழ்த்துவன.
  • கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்வனும் நீதானோ, எனத் தாலாட்டு பாடியவர்.
  • “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
  • மாதவம் செய்திட வேண்டுமம்மா”
  • “சாலைகளில் பல தொழில்கள் பெருகவேண்டும்
  • சபைகளிலே தமிழ் எழுந்து முழங்கவேண்டும்”

  • நாமக்கல் கவிஞர்:



  • இவரின் கவிதைகளில் காந்தியச் சிந்தனை அதிகம்.
  • “தமிழன் என்றோர் இனமுண்டு
  • தனியே அவற்கொரு குணமுண்டு”
  • “பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
  • பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்”
  • கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
  • கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”

  • முடியரசன்:



  • இவரின் கவிதையில் பகுத்தறிவு நோக்கும், முற்போக்குச் சிந்தனையும் தமிழுணர்வும் அதிகம் காணலாம்.

  • ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால்
    அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற
    தீங்குடை மனப்போக்கர் வாழும்நாட்டில்
    தென்படுமோ மொழியுணர்ச்சி?

    சுரதா:



  • சுரதாவின் கவிதைகளில் புதிய உவமைகளைக் காணலாம்.
  • அவரி “உவமைக் கவிஞர்” என்று அழைப்பர்.
  • மறைமலையடிகளைப் பற்றி சுரதா பாராட்டுதல்,

  • முல்லைக்கோர் காடுபோலும்
    முத்துக்கோர் கடலேபோலும்
    சொல்லுக்கோர் கீரன்போலும்
    தூதுக்கோர் தென்றல்போலும்
    கல்விக்கோர் கம்பன்போலும்
    கவிதைக்கோர் பரணர்போலும்
    வில்லுக்கோர் ஓரிபோலும்
    விளங்கினார், வென்றார், நின்றார்.

    வாணிதாசன்:



  • பாரதிதாசனைத் தொடர்ந்து இயக்கியின் அழகை படம்பிடித்துக் காட்டுவதில் வாணிதாசன் கவிதைகள் சிறந்து விளங்கின.

  • மணிக்கொடி:



  • ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் முதலியோர் தொடக்கத்தில் மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதினர்.

  • எழுத்து:



  • எஸ்.வைதீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா முதலியோர் எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைப் படைத்தனர்.

  • வல்லிக்கண்ணன்:



  • புதுகவிதை வரலாற்றில் வல்லிக்கண்ணன் பங்கு போற்றத்தக்கது.

  • ஏழையின் குடிசையில்
    அடுப்பும் விளக்கும் தவிர
    எல்லாமே எரிகின்றன.
    என்பது இவரின் புதுக்கவிதையின் எளிய வடிவை காட்டும்.

    கண்ணதாசன்



  • முத்தையா என்ற இயற்பெயர் கொண்டவர்.
  • சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார்.
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • ஆட்டனத்தி ஆதிமந்தி, மாங்கனி, கல்லக்குடி மாகாவியம், ஏசுகாவியம் முதலியன அவர் படைத்த நெடுங்கவிதை நூல்கள்.
  • “இராசதண்டனை” என்பது கம்பர்-அம்பிகாபதி வரலாற்றை வைத்து அவர் படைத்த இனிய நாடகம்.
  • ஆயிரம் தீவு அங்கயற்க்கண்ணி, வேலங்குடி திருவிழா முதலான பல புதினங்களை அவர் படைத்துள்ளார்.
  • இவற்றின் சேரமான் காதலி என்ற புதினம் சாகித்திய அகாடமி பரிசை பெற்றுள்ளது.
  • தென்றல், முல்லை, கண்ணதாசன், கடிதம், தமிழ்மலர் முதலிய இதழ்கள் தொடங்கி, அவற்றின் ஆசிரியராக இருந்து பணியாற்றினார்.
  • புறநானூறு


    சொற்பொருள்:



  • நிழற்றிய – நிழல் செய்த
  • துஞ்சான் – துயிலான்
  • மா – விலங்கு
  • நாழி – அளவுப்பெயர்
  • ஈதல் – கொடுத்தல்
  • துய்ப்போம் – நுகர்வோம்

  • இலக்கணக்குறிப்பு:



  • வெண்குடை – பண்புத்தொகை
  • நாழி – ஆகுபெயர்
  • ஈதல் – தொழிற்பெயர்

  • ஆசிரியர் குறிப்பு:



  • மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
  • இவர் இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்.
  • பத்துப்பாட்டில் “திருமுருகாற்றுப்படை”, “நெடுநல்வாடை” எனும் இரு நூல்களை படைத்துள்ளார்.

  • நூல் குறிப்பு:



  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது இந்நூல்.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
  • குறுந்தொகை


    நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
    நீரினும் ஆரள வின்றே சாரல்
    கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
    பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
    - தேவகுலத்தார்

    சொற்பொருள்:



  • நீர் – கடல்
  • கோல் – கொம்பு

  • இலக்கணக்குறிப்பு:



  • நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை
  • கருங்கோல் – பண்புத்தொகை

  • பிரித்தறிதல்:



  • ஆரளவு – அருமை+அளவு
  • கருங்கோல் – கருமை+கோல்
  • பெருந்தேன் – பெருமை+தேன்

  • நூல் குறிப்பு:



  • குறுமை + தொகை = குறுந்தொகை
  • குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ.
  • பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.
  • கடற்பயணம்


    தமிழரின் கடற்பயணம்:



  • “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று ஔவையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர்.
  • தொல்காப்பியம், தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை “முந்நீர் வழக்கம்” எனக் குறிப்பிட்டுளார்.
  • தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “பொருள்வயிற் பிரிவு” விளக்குகிறது. இப்பிரிவு “காலில்(தரைவழிப் பிரிதல்) பிரிவு, களத்தில்(நீர்வழிப் பிரிதல்) பிரிவு” என இரு வகைப்படும்.

  • யவனர்:



  • தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் “யவனர்” என அழைத்தனர்.

  • கப்பல் கட்டுதல்:



  • “கலம்செய் கம்மியர்” என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
  • அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.

  • புறநானூறு கூறும் உவமை:



  • நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

  • கடலைக் குறிக்கும் சொற்கள்:



  • ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி.

  • மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:



  • கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.

  • பட்டினப்பாலை:



  • புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன.
  • அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.

  • முசிறி:



  • முசிறி சேரர் துறைமுகம்.
  • அங்குச் “சுள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்தி நின்றன.
  • யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றனர் என்ற செய்தியை அகநானூறு கூறுகிறது.

  • கொற்கை:



  • கொற்கை பாண்டிய துறைமுகம்.
  • இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெணிசு நாடு அறிஞர் மார்க்கோபோலோ கூறியுள்ளார்.
  • மதுரைக்காஞ்சியும் சிருபாணாற்றுப்படையும் கொற்கை முத்தின் சிறப்பை கூறியுள்ளன.
  • “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என மதுரைக்காஞ்சி கூறுகிறது.

  • காவிரிப்பூம்பட்டினம்:



  • இது சோழர்களின் துறைமுகம்.
  • இங்கு பெரும்பாலும் வாழ்ந்தவர்கள் வணிகர்கள்.
  • அங்கு சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.

  • ஏற்றுமதி இறக்குமதி:



  • பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் கூறுகின்றது.
  • தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன.
  • சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின.
  • கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது.
  • திருக்குறள்


    சொற்பொருள்:



  • செவிச்செல்வம் – கேள்விச்செல்வம்
  • தலை – முதன்மை
  • போழ்து – பொழுது
  • ஈயப்படும் – அளிக்கப்படும்
  • ஆவி உணவு – தேவர்களுக்கு வேல்வியின்போது கொடுக்கப்படும் உணவு
  • ஒப்பர் – நிகராவர்
  • ஒற்கம் – தளர்ச்சி
  • ஊற்று – ஊன்றுகோல்
  • ஆன்ற – நிறைந்த
  • வணங்கிய – பணிவான

  • இலக்கணக்குறிப்பு:



  • வயிற்றுக்கும் – இழிவு சிறப்பும்மை
  • கேட்க – வியங்கோள் வினைமுற்று
  • இழுக்கல், ஒழுக்கம் – தொழிற்பெயர்கள்
  • ஆன்ற – பெயரெச்சம்
  • அவியினும் வாழினும் – எண்ணும்மை

  • பிரித்தறிதல்:



  • சுவையுணரா = சுவை + உணரா
  • வாயுணர்வு = வாய் + உணர்வு
  • செவிக்குணவு = செவிக்கு + உணவு

  • பொதுவான குறிப்புகள்:



  • திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
  • திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
  • ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாகளில் இடம்பெற்றுள்ளது.
  • அதிகாரங்கள் 133. இதன் கூட்டுத்தொகை ஏழு.
  • மொத்த குறட்பாக்கள் 1330. இதன் கூட்டுத்தொகை ஏழு.
  • சீட்டுக்கவி


    சொற்பொருள்:



  • கந்துகம் – பந்து
  • கோணம் – வாட்படை
  • குந்தம் – சூலம்
  • கொடை – வேனிற்காலம்
  • பாடலம் – பாதிரிப் பூ
  • மா – மாமரம்
  • சடிலம் – சடை
  • கிள்ளை – கிலி
  • கந்தருவம், கந்துகம், கோணம், கொக்கு, கொடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை – குதிரை

  • இலக்கணக்குறிப்பு:



  • எழுதி, புரந்து – வினையெச்சம்
  • படித்த, தீர்த்த – பெயரெச்சம்
  • பாடாத, பறவாத, சூடாத – எதிர்மறைப் பெயரெச்சம்
  • விடல் – தொழிற்பெயர்

  • ஆசிரியர் குறிப்பு:



  • அந்தக்கவி வீரராகவர் காஞ்சிபுரம் மாவட்டம் பூதூரில் பிறந்து பொன் விளைந்த கலதூரில் வாழ்ந்தவர்.
  • தந்தை = வடுகநாதர்.
  • இவர் பிறவியிலே கண் பார்வை அற்றவர்.
  • எனினும் கேள்வியறிவின் வாயிலாக கல்வி பயின்றார்.
  • இவர் ஏடுகள் எழுதாமல் தன் மனத்திலேயே எழுதிப் படித்தார் என அவரே கூறுகிறார்.
  • இலங்கை சென்று பரராசசேகர மன்னனை பாடி ஒரு யானை, போற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று ஊர் திரும்பினார்.

  • படைத்த நூல்கள்:



  • திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை.

  • நூல் குறிப்பு:



  • இப்பாடல் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
  • இதில் 110 புலவர்கள் பாடிய 1113 பாடல்கள் உள்ளன.

  • சீட்டுக்கவி:



  • புலவர், பெரும்பாலும் அரசர் முதலான கொடையாளர்களுக்குத் தாம் விரும்பும் பொருளைப் பெறவேண்டி, ஒலைச்சீட்டில் கவியாக எழுதி அனுப்புவர். அக்கவிதைக்கு சீட்டுக்கவி எனப் பெயர்.
  • இதற்கு ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.