Tamil Reading 6th Std | Kalvipriyan-5

kalvipriyan Online Test January 2018 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan



தனிப்பாடல்

சொற்பொருள்:

............
  • இரட்சித்தானா? – காப்பாற்றினானா?
  • அல்லைத்தான் – அதுவும் அல்லாமல்
  • பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
  • குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்பு நோய்
  • குரைகடல் – ஒலிக்கும் கடல்
  • நூல் குறிப்பு:

    ............
  • புலவர்கள், அவ்வப்போது பாடிய பாடல்களை “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலக தொகுத்துள்ளனர்.
  • பெரும்பாலான பாடல்கள் இருநூறு முதல் முந்நூறு ஆண்டுகளுக்குள் பாடப்பட்டவை.
  • இராமச்சந்திரக் கவிராயர் துன்பத்தையும், நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர்.

  • அந்த காலம் இந்த காலம்

    ஆசிரியர் குறிப்பு:

    ............
  • உடுமலை நாராயண கவி தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
  • சமுதாயப் பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.
  • “பகுத்தறிவு கவிராயர்” என தமிழக மக்களால் அழைக்கப்பட்டவர்.
  • காலம்: 25.09.1899 – 23.05.1981
  • தயக்கம் இன்றித் தமிழிலேயே பேசுவோம்

    ............
  • டிவி – தொலைக்காட்சி
  • ரேடியோ – வானொலி
  • டிபன் – சிற்றுண்டி
  • டீ – தேநீர்
  • கரண்ட் – மின்சாரம்
  • டெலிபோன் – தொலைபேசி
  • ஃபேன் – மின்விசிறி
  • சேர் – நாற்காலி
  • லைட் – விளக்கு
  • டம்ளர் – குவளை
  • சைக்கிள் – மிதிவண்டி
  • பிலாட்பாரம் – நடைப்பாதை
  • ஆபிஸ் – அலுவலகம்
  • சினிமா – திரைப்படம்
  • டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
  • ரோடு – சாலை
  • பிளைட் – விமானம்
  • பேங்க் – வங்கி
  • தியேட்டர் – திரைஅரங்கு
  • ஆஸ்பத்திரி – மருத்துவமனை
  • கம்ப்யூட்டர் – கணினி
  • காலேஜ் – கல்லூரி
  • யுனிவர்சிட்டி – பல்கலைகழகம்
  • டெலஸ்கோப் – தொலைநோக்கி
  • தெர்மோமீட்டர் – வெப்பமானி
  • இன்டர்நெட் – இணையம்
  • இஸ்கூல் – பள்ளி
  • சயின்ஸ் – அறிவியல்
  • மைக்ரோஸ்கோப் – நுண்ணோக்கி
  • நம்பர் – எண்
  • நாடும் நகரமும்

    நாடு:

    ............
  • நாடு என்ற சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தை குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
  • மூவேந்தர்களின் ஆட்சிக்குட்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள் அவரவர் பெயராலேயே சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு என்று அழைக்கப்பட்டன.
  • நாளடைவில் முந்நாடுகளின் உட்பிரிவுகளும் “நாடு” என்று அழைக்கப்பட்டன. கொங்கு நாடு, தொண்டை நாடு முதலியன இதற்குச் சான்றாகும்.
  • முன்னாளில் முரப்புநாடு என்பது பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது அப்பெயர் பொருநை யாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது. அதற்கு எதிரே ஆற்றின் மறுகரையிலுள்ள மற்றொரு சிற்றூர் வல்லநாடு என்னும் பெயருடையது.
  • சோழநாட்டில் மாயவரத்திற்கு அணித்தாகவுள்ள ஓரூர் கொரநாடு என்று அளிக்கபடுகிறது. கூர்ரைநடு என்பது கொரநாடு என்று மருவிற்று. பட்டுகோட்டை வட்டத்தில் கானாடும், மதுரங்க வட்டத்தில் தென்னாடும் உள்ளன.

  • நகரம்:

    ............
  • சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயாரால் வழங்கும். ஆழ்வார்களின் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் குருகூர் என்னும் பழம்பெயரை துறந்து, ஆழ்வார்த் திருநகரியாகத் திகழ்கிறது.
  • பாண்டிநாட்டிலுள்ள விருதுப்பட்டி, வர்த்தகத்தால் மேம்பட்டு இன்று விருதுநகராக விளங்குகிறது.
  • இக்காலத்தில் தோன்றும் புத்தூர்களும் நகரம் என்னும் பெயரையே பெரிதும் நாடுவனவாகத் தெரிகின்றன.
  • சென்னை:

    ............
  • திருமயிலைக்கு அருகேயுள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப்பெற்றது. அவ்வூரின் பெயர் அல்லிக்கேணி என்பதாகும். அல்லிக்கேணி என்பது அல்லிக்குளம். அங்கே பெருமாள் கோவில் கொண்டமையால் திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருவல்லிக்கேணி ஆயிற்று.
  • புரம்:

    ............
  • “புரம்” என்னும் சொல், சிறந்த ஊர்களை குறிப்பதாகும். ஆதியில் காஞ்சி என்று பெற்ற ஊர் பின்னர் “புரம்” என்பது சேர்ந்து காஞ்சிபுரம்ஆயிற்று. பல்லவபுரம்(பல்லாவரம்), கங்கைகொண்ட சோழபுரம், தருமபுரம் போன்றவை மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.
  • பட்டிணம்:

    ............
  • கடற்கரையில் உருவாகும் நகரங்கள் “பட்டிணம்” எனப் பெயர் பெரும். காவிரிப்பூம்பட்டிணம், நாகபட்டிணம், காயல்பட்டிணம், குலசேகரபட்டிணம், சதுரங்கப்பட்டிணம் ஆகியவை “பட்டிணம்” எனப் பெயர் பெற்ற ஊர்களாகும்.
  • பாக்கம்:

    ............
  • கடற்கரைச் சிற்றூர்கள் “பாக்கம்” எனப் பெயர் பெரும். கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம் இப்படிப் “பாக்கம்” எனப் பெயர் பெற்ற ஊர்களைக் குறிப்பிடலாம்.
  • புலம்:

    ............
  • “புலம்” என்னும் சொல் நிலத்தைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக மாம்புலம், தமரைபுலம், குரவைபுலம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
  • குப்பம்:

    ............
  • நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள் “குப்பம்” என்னும் பெயரால் அழைக்கப்படும். காட்டுக்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
  • ஆசிரியர்:

    ............
  • சொல்லின் செல்வர் எனப்படும் ரா.பி.சேதுபிள்ளை அவர்களின் “ஊரும் பேரும்” என்ற நூலின் இருந்து எடுக்கப்பட்டது.
  • குற்றாலக் குறவஞ்சி

    சொற்பொருள்:

    ............
  • வானரங்கள் – ஆண் குரங்குகள்
  • மந்தி – பெண் குரங்குகள்
  • வான்கவிகள் – தேவர்கள்
  • காயசித்தி – இறப்பை நீக்கும் மூலிகை
  • வேணி – சடை
  • மின்னார் – பெண்கள்
  • மருங்கு – இடை
  • நூல் குறிப்பு:

    ............
  • இந்நூலின் முழுப்பெயர் திருக்குற்றாலக் குரவஞ்சி.
  • ஆசிரியர், திருகூட ராசப்பக் கவிராயர் ஆவார்.
  • குறவஞ்சி என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது இந்நூல்.
  • மரமும் பழைய குடையும்

    சொற்பொருள்:

    ............
  • கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம்
  • பீற்றல் குடை –பிய்ந்த குடை
  • ஆசிரியர் குறிப்பு:

    ............
  • அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர்.
  • இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு.
  • நூல் குறிப்பு:


    ............
  • ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது “சிலேடை” எனப்படும்.
  • இதனை “இரட்டுறமொழிதல்”(இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது