Tamil Reading 8th Std Page-3

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

இந்திய விடுதலைப் போரில் தமிழகப் பெண்களின் பங்கு

வேலு நாச்சியார்:

  • இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி.
  • இவர் இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதியின் மகள்.
  • சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதரை மணந்தார்.
  • 1772இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுக நாதருக்கும் ஏற்பட்ட போரில் முத்துவடுக நாதர் வீரமரணம் அடைந்தார்.
  • பின்பு வேலு நாச்சியாரே தலைமை ஏற்று போர் புரிந்தார்.
  • வேலு நாச்சியாருக்கு உதவியவர் மைசூர் மன்னர் ஹைதர் அலி. இவர் 5000 படை வீரர்களை உதவிக்கு அனுப்பினார்.
  • 1780ஆம் ஆண்டு தம் கணவரை கொன்றவார்களைக் வென்று மீண்டும் சிவகங்கையை மீட்டார்.

கடலூர் அஞ்சலையம்மாள்:

  • இவர் 1890 ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகரில் பிறந்தார்.
  • 1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கிய பொது இவரும் தம் பொதுவாழ்கையை தொடங்கினார்.
  • நீலன் சிலையை அகற்றும் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறைக்கு சென்றார்.
  • வேலூர் சிறையில் இருந்த போது, கருவுற்ற நிலையில் இருந்த இவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
  • நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தில் தனது 9 வயது மகளையும் ஈடுபடுத்தினார். இவருடன் இவர் மகளும் சிறைத்தண்டனை பெற்றார்.
  • காந்தியடிகள் சிறையில் வந்து பார்த்து, இவரின் மகள் அம்மாக்கண்ணுவை தன்னுடன் அழைத்து சென்று வார்தாவில் உள்ள ஆசிரமத்தில் படிக்க வைத்து அவருக்கு லீலாவதி எனப்பெயரும் இட்டார்.
  • இவர் காந்தியடிகளால் “தென்னாட்டின் ஜான்சிராணி” என அழைக்கப்பட்டார்.

அம்புஜத்தம்மாள்:

  • இவர் 1899ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இவர் அன்னை கஸ்துரிபாயின் எளிமையான தோற்றத்தினால் கவரப்பட்டு எளிமையாக வாழ்ந்தார்.
  • இவர் பாரதியாரின் பாடல்களை பாடி விடுதலை உணர்வை ஊட்டினார்.
  • இவர் “காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்” என்று அழைக்கப்படுபவர்.
  • தன் தந்தையின் பெயரோடு காந்தியடிகளின் பெயரையும் இணைத்து “சீனிவாச காந்தி நிலையம்” என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.
  • இவர் தம் எழுபதாண்டு நினைவாக, “நான் கண்ட பாரதம்” என்ற நூலை எழுதினார்.
  • 1964ஆம் ஆண்டு இவருக்கு “தாமரைத்திரு”(பத்மஸ்ரீ) விருது வழங்கப்பட்டது.

காவடிச்சிந்து

சொற்பொருள்:

  • கலாபம் – தோகை
  • விவேகன் – ஞானி
  • கோல – அழகிய
  • வாவி – பொய்கை
  • மாதே – பெண்ணே

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = அண்ணாமலையார்
  • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
  • பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள்
  • நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்
  • சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.
  • காலம் = 1861–1890

நூல் குறிப்பு:

  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.
  • இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.

விக்ரமசோழன் உலா

பாடலின் பொருள்:

  • குடகு மலையை ஊடறுத்து அலைமோதும் காவிரியைத் தந்தவன் = கவேரன்.
  • தெளிந்த அருவியை உடைய மேரு மலையின் உச்சியில் புலிக்கொடி நாட்டி, பொன்னியாகிய காவிரியின் இருகரைகளையும் உயர்த்திக் கட்டியவன் = சோழன் கரிகாலன்.
  • பொய்கையாரின் களவழி நாற்பது பாடலுக்குப் பரிசாக் சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சிறைவீடு செய்தவன் = சோழன் செங்கணான்.
  • போரில் பெருமையாக எண்ணத்தக்க விழுப்புண்கள் 96ம் பெற்றவன் = சோழன் விசயாலயன்.
  • சிவபெருமான் ஆடலரசாய்க் காட்சிதரும் தில்லைக்குப் பொன்வேய்ந்தவன் = சோழன் முதல் பராந்தகன்.
  • பதினெட்டு சிற்றூர்களையும் வென்று மலைநாடு வென்றவன் = சோழன் முதல் இராசராசன்.
  • வடக்கே படையெடுத்துக் கங்கையும் கிழக்கில் கடாரமும் வென்று கைக்கொண்டவன், சேரர் கப்பற்படை முழுவதையும் அழித்தவன் = சோழன் இராசேந்திரன்.
  • சாளுக்கியர்களின் தலைநகரான கல்யானபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்றவன் = சோழன் இராசாதிராசன்.
  • கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் = சோழன் இராசேந்திரன்.
  • திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் = சோழன் இராசமகேந்திரன்.

சொற்பொருள்:

  • குவடு – மலை
  • பொன்னி – காவிரி
  • கொத்து – குற்றம்
  • அரவம் – பாம்பு

ஆசிரியர் குறிப்பு:

  • இயற்பெயர் = ஒட்டக்கூத்தர்
  • சிறப்புப்பெயர் = கவிச்சக்ரவர்த்தி
  • சிறப்பு = விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கசோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு விளங்கியவர்.
  • இயற்றிய நூல்கள் = மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
  • காலம் = பனிரெண்டாம் நூற்றாண்டு

நூல் குறிப்பு:

  • உலா என்பது 96 வகை சிற்றிலக்கியனங்களுள் ஒன்று.
  • இறைவன், மன்னன், மக்களுள் சிறந்தோர் முதலியோரின் சிறப்புகளை எடுத்துக்கூறும் நோக்கிலேயே இவ்வகை சிற்றிலக்கியங்கள் எழுதப்பெற்றன.
  • உலா என்பதற்கு “ஊர்கோலம் வருதல்” என்பது பொருள்.
  • பாட்டுடைத் தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் என எழுவகைப் பெண்களும் காதல் கொள்வதாய்க் அமைத்துப் பாடுவது உலா.
  • முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
  • அவனின் தயார் மதுராந்தகி.
  • இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

திருமந்திரம்

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
-திருமூலர்

சொற்பொருள்:

  • திடம் – உறுதி
  • மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு
  • உபாயம் – வழிவகை

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அத்துடன் அர் என்னும் மரியாதைப்பன்மையும் பெற்று, திருமூலர் என ஆயிற்று.
  • காலம் – ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.

நூல் குறிப்பு;

  • சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை திருமந்திரம்.
  • இதற்குத் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேருபெயரும் உண்டு.
  • இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
  • “ஒன்றே குளம் ஒருவனே தேவன்” என்பது இந்நூலின் புகழ்பெற்ற தொடராகும்.

தேம்பாவணி

சொற்பொருள்:

  • நகை – புன்னகை
  • முகை – மொட்டு
  • மேனி – உடல்

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் = வீரமாமுனிவர்
  • இயற்பெயர் = கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி
  • பெற்றோர் = கொண்டல் போபெஸ்கி, எலிசபெத்
  • பிறந்த ஊர் = இத்தாலி நாட்டில் காஸ்திக்கிளியோன்
  • அறிந்த மொழிகள் = இத்தாலியம், இலத்தின், கிரேக்கம், எபிரேயம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம்
  • தமிழ்க் கற்பித்தவர் = மதுரைச் சுப்ரதீபக் கவிராயர்
  • சிறப்பு = முப்பதாம் வயதில் தமிழகம் வந்து தமிழ் பயின்று காப்பியம் படைத்தமை.
  • இயற்றிய நூல்கள் = ஞானஉபதேசம், பரமார்த்த குரு கதை, சதுரகராதி, திருக்காவலூர்க் கலம்பகம், தொன்னூல் விளக்கம்
  • காலம் = 1680-1747

நூல் குறிப்பு:


  • தேம்பாவணி = தேம்பா + அணி.
  • தேம்பாவணி = தேன் + பா + அணி(தேன் போன்ற இனிய பாடல்களாலான மாலை)
  • இந்நூலின் தலைவர் இயேசு பெருமானின் வளர்ப்பு தந்தை சூசையப்பர்.
  • இநூலை “கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்” என்று சிறப்பிப்பர்.
  • இந்நூலின் 3 காண்டங்களும், 36 படலங்களும், 3615 பாடல்களும் உள்ளன.