Tamil Reading pages 9 th std

kalvipriyan Online Test January 2018 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan




பெருந்தலைவர் காமராஜர்


புகழுரைகள்:

.
  • தன்னலமற்ற தலைவர்
  • கர்மவீரர்
  • கல்விக்கண் திறந்த முதல்வர்
  • ஏழைப்பங்காளர்
  • இளமைப் பருவம்:

    .
  • விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி, சிவகாமி இனையார்க்கு மகனாய் 19௦03ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 15ஆம் நாள் பிறந்தார்.
  • காமராசரின் தாத்தா நாட்டாண்மைக்காரர்.
  • அவருக்கு பன்னிரண்டு வயதிலேயே கல்வியில் நட்டமில்லாமல் போயிற்று.

  • அரசியலில் ஈடுபாடு:

    .
  • காமராசர் நாள்தோறும் செய்தித்தாள்களை படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார்.
  • “மெய்கண்டான் புத்தகசாலை” என்ற நூல் நிலையத்திற்கு சென்று அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து திறமையாக பேசவும் கற்று கொண்டார்.
  • இளம் வயதிலேய காங்கிரசில் சேர்ந்தார்.
  • பதினோரு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
  • அவரது தன்னலமற்ற உழைப்பைக் கண்டு தலைவர் சத்தியமூர்த்தி அவரை கட்சியின் செயலாளர் ஆக நியமித்தார்.
  • காமராசரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி.
  • தலைவர்களை உருவாக்குபவர்:

    .
  • 1939ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஆனார்.
  • 12 ஆண்டுகள் அப்பதவியில் இருந்தார்.
  • பலர் ஆட்சி அமைக்க இவர் காரணமாக இருந்ததால் இவர் “தலைவர்களை உருவாக்குபவர்” எனப் போற்றப்பட்டார்.
  • முதலமைச்சர் காமராசர்:

    .
  • 1954இல் இராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதும் காமராசர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • 1963இல் தாமாக பதவி விலகும்வரை அப்பதவியில் திறம்படச் செயலாற்றினார்.
  • காமராசர் ஆட்சிக் காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் தொழில்துறை அமைச்சராகவும், சி.சுப்பிரமணியம் கல்விஅமைச்சராகவும் பணியாற்றினார்.

  • தொழில் முன்னேற்றம்:

    .
  • காமராசர் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • கிண்டி, அம்பத்தூர், ராணிப்பேட்டை முதலிய இடங்களில் பெரிய தொழிற்பேட்டைகளும், மாவட்டந்தோறும் சிறிய தொழிற்பேட்டைகளும் அமைக்கப்பட்டன.
  • இவர் காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது.
  • நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைசிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, ஆவடி இரயில்வே வாகனத் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியன இவரது காலத்தில் தொடங்கப்பெற்றன.
  • கல்விப் புரட்சி:

    .
  • காமராசர் காலத்தில் கட்டாயக் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • “தெருதோறும் தொடக்கப்பள்ளி, ஊர் தோறும் உயர்நிலைப்பள்ளி” என்பதே அவரது நோக்கமாக அமைந்தது.
  • பள்ளி வேலைநாட்களை 180இல் இருந்து 200ஆக உயாத்தினார்.
  • தொடக்கப்பள்ளியில் மதிய உணவுத் திட்டம் இவரால் தொடங்கப்பட்டது.
  • ஈராண்டுகளில் பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் 133 நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகள் பெற்று பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை பொருட்கள் வாங்கப்பட்டன.
  • மருத்துவக்கல்லூரி முதலான தொழிற்கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடனளிக்க ஏற்பாடு செய்தார்.
  • சமுக முன்னேற்ற திட்டங்கள்:

    .
  • தஞ்சாவூர்ப் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு அறுபது விழுக்காடு பங்கு கிடைக்க வழிவகை செய்தார்.
  • நிலசீர்திருத்தம் இவரால் கொண்டுவரப்பட்டது.
  • நில உச்ச வரம்பு முப்பது ஏக்கர் எனக் குறைக்கப்பட்டது.
  • மக்கள் நலத்திட்டங்களில் ஓய்வூதியம் முக்கியமானது.
  • காமராசர் திட்டம்:

    .
  • 1962ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்கு பின், காங்கிரசுக் கட்சியின் செல்வாக்கு சரியத் தொடங்கியது.
  • கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் எனக் காமராசர் திட்டம் ஒன்றை கொண்டுவந்தார். அத்திட்டமே “காமராசர் திட்டம்” ஆகும்.
  • அகில இந்திய காங்கிரசுத் தலைவர்:

    .
  • புவனேஸ்வர் நகரில் 1963ஆம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில் காமராசர் அகில இந்தியக் காங்கிரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.
  • லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி போன்றோரை பிரதமர் பதவியில் அமர வைத்தார்.
  • காமராசருக்கு செய்த சிறப்புகள்:

    .
  • காமராசரக்கு நடுவண் அரசு “பாரதரத்னா விருது” அளித்துச் சிறப்பித்து, நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியது.
  • தமிழக அரசு இவரின் பெயரால் “மதுரை காமராசர் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டியது.
  • கன்னியாகுமரியில் காமராசர் மணி மண்டபம் கட்டப்பட்டது.
  • சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் சிலை அமைத்து சிறப்பித்தது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் நினைவு இல்லமாக ஆக்கப்பட்டது.
  • அவரின் விருதுநகர் இல்லமும் அரசுடைமை ஆக்கி நினைவு இல்லமாக்கப்பட்டது.
  • தேனாம்பேட்டையில் காமராசர் அரங்கம் நிறுவப்பட்டது.
  • காமராசர் பிறந்த நாளான சூலை 15ஆம் நாள் ஆண்டுதோறும் “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • இவரை “கல்விக் கண் திறந்தவர்” எனத் தமிழுலகம் போற்றுகிறது.
  • மறைவு:

    .
  • 1972ஆம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் இவ்வுலக வாழ்வி நீத்தார்.

  • நாட்டுப்புறப்பாடல்


    பாடலின் பொருள்:

    .
  • மீனவர்களாகிய எங்களுக்கு விடிவெள்ளி தான் விளக்கு.
  • பரந்த கடலே பள்ளிக்கூடம்.
  • கடலே எங்களின் உற்ற தோழன்.
  • மீன்பிடி வலையே படிக்கும் நூல்.
  • கட்டுமரமே வாழும் வீடு.
  • காயும் கதிரே வீட்டுக்கூரை.
  • மேகமே குடை.
  • பிடிக்கும் மீன்களே பொருள்கள்.
  • இடியும் மின்னலும் பார்க்கும் கூத்து.
  • வெண்மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை.
  • நிலவே முகம் பார்க்கும் கண்ணாடி.
  • மூச்சடக்கி நீந்துதலே வழிபாடு.
  • வணங்கும் தலைவர் பெருவானம்.
  • சொற்பொருள்:

    .
  • விரிகடல் – பரந்த கடல்
  • காயும் ரவிசுடர் – சுட்டெரிக்கும் சூரியக் கதிர்
  • யோகம் – தியானம்

  • பெண்மை


    சொற்பொருள்:

    .
  • உறுதி – உளஉறுதி
  • சொருபம் – வடிவம்
  • தரணி – உலகம்
  • தாரம் – மனைவி
  • இலக்கணக்குறிப்பு:

    .
  • அன்பும் ஆர்வமும் அடக்கமும் – எண்ணும்மை
  • இன்ப சொருபம் – உருவகம்
  • ஆசிரியர் குறிப்பு:

    .
  • கவிஞர் வெ. இராமலிங்கனார், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தார்.
  • பெற்றோர் = வெங்கடராமன்-அம்மணி அம்மாள்
  • தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர்.
  • இவருக்கு நடுவண் அரசு “பத்ம பூஷன்” விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • இவரின் காலம் கி.பி.1888 முதல் 1972 வரை.

  • தில்லையாடி வள்ளியம்மை


    பெற்றோரும் பிறப்பும்:

    .
  • வள்ளியம்மை தென்னாப்ரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் என்னும் நகரில் பிறந்தார்.
  • இவரின் பெற்றோர் = முனுசாமி, மங்களம்.
  • இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பட்டார்.
  • அறப்போர்:

    .
  • தென்னாப்ரிக்க நாட்டில் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 1913ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் இந்தியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • போராட்டத்தின் போது காந்தியடிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாகப் பதிந்தது.
  • 1913ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23ஆம் நாள் வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
  • அவருக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 3 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்தது.
  • சிறைவாழ்க்கை:

    .
  • சிறையில் வள்ளியம்மைக்கு கல்லும் மண்ணும் கலந்த உணவே தரப்பட்டது.
  • அவரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
  • சிறையில் உயிருக்கு போராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
  • நாட்டுப்பற்று:

    .
  • விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மை தமது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார்.
  • இதனை அறிந்த காந்தியடிகள் அவரை காண வந்தார்.
  • “சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” என்று காந்தியடிகள் அவரிடம் கேட்டார்.
  • அதற்கு வள்ளியம்மை, “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார்.
  • அத்துடன் இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் என்றார்.
  • உடல் நலம் குன்றிய வள்ளியம்மை 1913ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் நாளன்று தமது 16ஆம் வயதில் மரணம் அடைந்தார்.
  • காந்தியடிகளின் கருத்து:

    .
  • “என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது” என்று காந்தியடிகள் மனம் வருந்தினார்.
  • “மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். அவருடைய தியாகம் வீண் போகாது. சத்தியத்திற்காக உயிர் நீத்த அவருடைய உருவம் என் கண்முன் நிற்கிறது. நம்பிக்கை தான் அவரது ஆயுதம்” என்று வள்ளியம்மை குறித்து “இந்தியன் ஒப்பீனியன்” இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
  • தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் “தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
  • அரசு செய்த சிறப்புகள்:

    .
  • தில்லையாடியில் தமிழக அரசு அவரது சிலையை நிறுவி உள்ளது.
  • கோ-ஆப்-டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையில் உள்ள தனது 600வது விற்பனை மையத்திற்கு “தில்லையாடி வள்ளியம்மை மாளிகை” என்று பெயர் சூட்டிப் பெருமைபடுத்தி உள்ளது.
  • சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பென்புலிக்குட்டிக்கு தமிழக முதல்வர், தில்லையாடி வள்ளியம்மை நினைவாக “வள்ளி” எனப் பெயரிட்டார்.

  • இராணி மங்கம்மாள்


    இராணி மங்கம்மாள்:

    .
  • மதுரையை ஆண்டு வந்த சொக்கநாத நாயக்கரின் மனைவி இராணி மங்கம்மாள்.
  • இராணி மங்கம்மாளின் கணவர் இறந்த போது அவர் மகன் அரங்க கிருஷ்ணமுத்துவீரப்பன் இளம் வயதினனாக இருந்தான். அவனுக்கு துணையாக இருக்க வேண்டும் என்னும் கடமை உணர்வினால் இராணி மங்கம்மாள் உடன்கட்டை ஏறவில்லை.
  • மகனுக்கு அரசும் அறிவுரையும்:

    .
  • மங்கம்மாள், தனது மகன் அரங்க கிருட்டினமுத்துவீரப்பனுக்குத் திருமணம் செய்வித்த பின்னர் முடிசூட்டினார்.
  • “அரசாட்சியை அடக்கத்தோடும் தந்திரத்தோடும் நாம் நோக்கவேண்டும்; முன்கோபமும் அதன் விளைவும் அரசியலில் ஒருபோதும் வெற்றியைத் தராது. பகைவரை எதிர்கொள்ள எப்போதும் ஆய்த நிலையில் இருப்பதோடு மிகுந்த பொறுமையுடனும் செயல்பட வேண்டும்” என அறிவுரை கூறினார்.
  • முத்துவீரப்பன், “நேர்மையை காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை” என்ற கொள்கையுடன் ஆட்சி புரிந்தான்.
  • மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பேற்றல்:

    .
  • முத்துவீரப்பன் இறந்த சில நாட்களில் அவன் மனைவி சின்னமுத்தம்மாள் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து, சில நாட்களில் அவரும் இறந்தார்.
  • கி.பி.1688ஆம் ஆண்டு பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அரியணை ஏற்றப்பட்டான்.
  • பாட்டி மங்கம்மாள் காப்பாட்சியாளராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்.
  • முகலாயர்களுக்கு பணிதல்:

    .
  • முகலாய பேரரசர் அவுரங்கசீப் தனது தக்கான நடவடிக்கை மேற்கொண்டிருந்த நேரம் மங்கம்மாள் பெரும் செல்வம் அவர்களுக்கு கொடுத்து தனது ஆட்சியை காப்ற்றிக்கொண்டார்.
  • முகலாயரின் உதவியோடு மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார்.
  • திருவிதாங்கூர் போர்:

    .
  • தளபதி நரசயப்பர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் மன்னர் இரவிவர்மாவை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
  • தஞ்சைப் போர்:

    .
  • தளபதி நரசய்ப்பர் தலைமையில் சென்ற படை தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜியை தோற்கடித்து, தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதரிடம்  இருந்து பெரும் பொருள்களை பெற்றுவந்தது.
  • மைசூர் போர்:

    .
  • மைசூர் மன்னர் சிக்கதேவராயன் காவிரியின் குறுக்கே அணைகட்டிய பொது, அவரை மங்கம்மாள் எதிர்த்தார்.
  • மங்கம்மாளுக்கு துணையாக தஞ்சை மராட்டியர் உதவினர்.
  • அச்சமயம் பெரும் மழைப் பொழிவால் அணைகள் உடைந்தன. சிக்கல் தற்காலிகமாக முடிவடைந்தது.
  • சமயக் கொள்கை:

    .
  • ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக்கொண்டு வாழவிடுவதே தருமம் என்ற கொள்கையை மங்கம்மாள் பின்பற்றினார்.
  • சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியாரை விடுதலை செய்து, போசேத் என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.
  • அறச்செயல்கள்:

    .
  • மதுரையில் பெரிய அன்னச் சத்திரம் கட்டினார்.
  • இவர் பல சாலைகளை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுச்சாலை, “மங்கம்மாள் சாலை” எனப்படுகிறது.
  • ஆணித்திங்களில் “ஊஞ்சல் திருவிழா” நடத்தினார்.

  • திருவிளையாடல்புராணம்


    சொற்பொருள்:

    .
  • வையை நாடவன் – பாண்டியன்
  • உய்ய – பிழைக்க
  • இறந்து – பணிந்து
  • தென்னவன் குலதெய்வம் – சொக்கநாதன் (அ) சுந்தரபாண்டியன்
  • இறைஞ்சி – பணிந்து
  • சிரம் – தலை
  • மீனவன் – மீன் கொடியை உடைய பாண்டியன்
  • விபுதர் – புலவர்
  • தூங்கிய – தொங்கிய
  • பொற்கிழி – பொன்முடிப்பு
  • நம்பி – தருமி
  • பைபுள் – வருத்தம்
  • பனவன் – அந்தணன்
  • கண்டம் – கழுத்து
  • வழுவு – குற்றம்
  • சீரணி – புகழ் வாய்ந்த
  • வேணி – செஞ்சடை
  • ஓரான் – உணரான்
  • குழல் – கூந்தல்
  • ஞானப்பூங்கோதை – உமையம்மை
  • கற்றைவார் சடையன் – சிவபெருமான்
  • உம்பரார் பத்தி – இந்திரன்
  • நுதல் – நெற்றி
  • ஆய்ந்த நாவலன் – நக்கீரன்
  • காய்ந்த நாவலன் – இறைவன்
  • இலக்கணக்குறிப்பு:

    .
  • உரைத்து, இரந்து – வினையெச்சம்
  • சொல்லி, இறைஞ்சி – வினையெச்சம்
  • மகிழ்ச்சி – தொழிற்பெயர்
  • தூங்கிய, ஆய்ந்த – பெயரெச்சம்
  • நேர்ந்து – வினையெச்சம்
  • கொண்டு, வைத்து – வினையெச்சம்
  • தேரா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • புனைமலர் – வினைத்தொகை
  • பற்றுவான், அஞ்சான் – வினையாலணையும் பெயர்
  • குற்றம் – தொழிற்பெயர்
  • தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த – பெயரெச்சம்
  • விழுந்து – வினையெச்சம்
  • வம்மை – பண்புத்தொகை
  • ஆசிரியர் குறிப்பு;

    .
  • பரஞ்சோதி முனிவர் நாகை மாவட்டம் திருமறைக்காடு(வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தவர்.
  • தந்தை – மீனாட்சி சுந்தர தேசிகர்
  • மதுரை நகரத்தார் வேண்டுகோளுக்கு இணங்க, திருவிளையாடல்புராணம் இயற்றினார்.
  • இந்நூலை சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் அரங்கேற்றினார்.
  • இவர், திருவிளையாடல் போற்றிக்கலிவெண்பா, மதுரைப் பதிற்றுபத்துதந்தாதி ஆகிய நூல்களையும், வேதாரண்ய புராணம் என்னும் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினார்.
  • நூல் குறிப்பு:

    .
  • திருவிளையாடல் புராணம், கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாசிய மான்மியத்தை அடிப்படையாக கொண்டது.
  • இந்நூல் மதுரைக்காண்டம்(18 படலம்), கூடற்காண்டம்(30 படலம்), திருவாலவாய்க்காண்டம்(16 படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளை உடையது.
  • இந்நூலின் 3363 விருதப்பாக்கள் உள்ளன.
  • இந்நூலில் இறைவனின் 64 திருவிளையாடல்கள் கூறப்பட்டுள்ளன.
  • ந.மு.வேங்கடசாமி இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார்.

  • வஞ்சகமாய் நெஞ்சமோடு மோதல்


    இலக்கணக்குறிப்பு:

    .
  • மனக்குரங்கு – உருவகம்
  • நாடுநகர் – உம்மைத்தொகை
  • செம்பொன் – பண்புத்தொகை
  • மாடுமஆடும் – எண்ணும்மை
  • ஆசிரியர் குறிப்பு:

    .
  • பாஸ்கரதாஸ் மதுரை நகரில் பிறந்தவர்.
  • இவர் இசைப்புலமையுடன் நாடகப்புலமையும் பெற்றவர்.
  • இவரின் பாடல்களைக் கேட்ட காந்தியடிகள் இவரை பெரிதும் பாராட்டினார்.

  • ஓய்வும் பயனும்


    அறிவியல் ஆய்வு செய்வாய் – நீ
    அன்றாடச் செய்தி படிப்பாய்!
    செறிவுறும் உன்றன் அறிவு – உளச்
    செழுமையும் வலிவும் பெறுவாய்!

    மருத்துவ நூல்கள் கற்பை – உடன்
    மனநூலும் தேர்ந்து கற்பாய்!
    திருத்தமெய்ந் நூல்கள் அறிவாய் – வருந்
    தீமைடயும் பொய்யும் களைவாய்!
    - பெருஞ்சித்திரனார்

    ஆசிரியர் குறிப்பு:

    .
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இயற்பெயர் துரை.மாணிக்கம்
  • இவர் சேலம் மாவட்டம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்.
  • பெற்றோர் = துரைசாமி, குஞ்சம்மாள்.
  • 10.03.1933 அன்று பிறந்த இவர், 11.06.1995ஆம் நாள் மறைந்தார்.
  • கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, பள்ளிப்பறவைகள், நூறாசிரியம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
  • தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்கள் மூலம் தமிழ் உணர்வை ஊட்டினார்.

  • எதிர்காலம் யாருக்கு?


    ஆசிரியர் குறிப்பு:

    .
  • மீரா என்னும் பெயர் மீ.இராசேந்திரன் என்பதன் சுருக்கமே.
  • இவர் சிவகங்கையில் பிறந்தார்.
  • தாம் படித்த சிவகங்கை கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றினார்.
  • மூன்றும்ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள், குக்கூ ஆகிய கவிதை நூல்களையும், வா இந்தப்பக்கம், மீரா கட்டுரைகள் ஆகிய கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார்.
  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, பாவேந்தர் விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ் சான்றோர் பேரவை விருது போன்ற பரிசுகளை வென்றுள்ளார்.