Tnpsc/12/Tamil-4

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

இராசராச சோழன் உலா

உலா:

  • உலா என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • உலா என்பதற்கு “பவனி வருதல்” என்பது பொருள்.
  • தலைவன் வீதியில் உலா வர அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் காதல் கொள்வதாக அமைத்து பாடுவது உலா ஆகும்.
  • இது கலிவென்பாவால் இயற்றப்படும்.
  • இதில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை என்பர்.
  • உலாவரும் தலைவனைக் கண்டு காதல் கொண்ட ஏழு பருவ மகளிர் தனித்தனியாக கூறுவன உலாவின் பின்னிலை எனப்படும்.
  • ஏழு பருவப் பெண்களின் வயது = பேதை(5-7), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-32), பேரிளம்பெண்(33-40).

ஒட்டக்கூத்தர்:

  • இராசராசசோழன் உலாவை பாடியவர் ஒட்டக்கூத்தர்.
  • இவர், “கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்” என்றெல்லாம் புகழப்படுவார்.
  • இவர், விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையிலும் செல்வாக்கோடு இருந்தவர்.
  • இம்மூவரைப் பற்றி ஒட்டக்க்கூத்தர் பாடியதே, “மூவருலா”
  • இவரின் இயற் பெயர் = கூத்தர்
  • ஓட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் ஆதலால் இவர் ஒட்டக்க்கூத்தர் எனப்பட்டார்.

சொற்பொருள்:

சூளிகை – நிலாமுற்றம்சாளரம் – பலகணி
தெற்றி – திண்ணைபாங்கரும் – பக்கத்தில் உள்ள இடங்கள்
பிணங்கி – நெருங்கிமறுகு – தெரு
கோடி – வளைந்துசதகோடி – நூறுகோடி
மகோததி – கடல்உதியர் – சேரர்
சரதம் – வாய்மைபவித்ரம் – தூய்மை
மூவெழுகால் – 21 தலைமுறைஅவனி – நாடு
பெருமாள் – அரசர்கூடல் – காவிரிப்பூம்பட்டினம்

இலக்கணக்குறிப்பு:

வாயிலும் மாளிகையும் – எண்ணும்மைஎம்மருங்கும் – முற்றும்மை
மாடமும் ஆடரங்கும் – எண்ணும்மைசெய்குன்று – வினைத்தொகை
ஆடரங்கு – வினைத்தொகைசுற்றிய பாங்கர் – பெயரெச்சம்
மயங்கி, வணங்கி – வினையெச்சம்செற்ற சிலை – பெயரெச்சம்
காணீர் – ஏவல் வினைமுற்றுவிட்டவள் – பெயரெச்சம்
மதயெறிது - இரண்டாம் வேற்றுமைத்தொகைமுத்து முரசம் – பண்புத்தொகை
ஓங்கியுயர் – ஒருபொருட்பன்மொழிஉயரண்டம் – வினைத்தொகை

திருவேங்கடத்தந்தாதி

அந்தாதி:

  • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
  • இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார்:

  • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
  • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
  • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
  • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

சொற்பொருள்:

  • கழல் – திருவடி
  • பத்தி – ஊர்
  • குஞ்சி – தலைமயிர்
  • போதன் – பிரமன்
  • வாசவன் – இந்திரன்
  • அந்தி – மாலை
  • வேலை – கடல்
  • இருக்கு ஆரணம் – இருக்கு வேதம்
  • கஞ்சம் – தாமரை மலர்
  • அணங்கு – திருமகள்
  • பொழில் – சோலை

இலக்கணக்குறிப்பு:

  • சிற்றன்னை – பண்புத்தொகை
  • தாழ்பிறப்பு – வினைத்தொகை
  • மால் கழல் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கழல் – தானியாகு பெயர்
  • அந்தி காளை – உம்மைத்தொகை
  • வேங்கடம் – வினைத்தொகை
  • மதிவிளக்கு – உருவகம்
  • சேவடி – பண்புத்தொகை
  • இருக்கு ஆரணம் – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • நற்றாய் – பண்புத்தொகை

மதுரைக் கலம்பகம்

கலம்பகம்:

  • பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையை கலம்பகம் என்பர்.
  • கதம்பம் என்பது கலம்பகம் எனத் திரிந்ததாக உ.வே.சா கூறுவார்.
  • கலம்பகம் 18 உறுப்புகளை உடையது.
  • தமிழின் முதல் கலம்பகம் = நந்திக் கலம்பகம்

குமரகுருபரர்:

  • இவரின் காலம் பதினேழாம் நூற்றாண்டு.
  • பிறந்தது முதல் ஐந்தாண்டு வரை பேசாத குழந்தையாக இருந்த இவர் பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருளால் பேசினார்.
  • படைப்புகள் = மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கந்தர்கலிவெண்பா, காசிக்கலம்பகம், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் போன்ற பல நூல்களை இயற்றி உள்ளார்.
  • இவரது செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் “இன்னோசை” ஆகும்.

சொற்பொருள்:

  • ஏமவெற்பு – மேருமலை
  • ஏமம் – பொன்
  • மலயாசலம் – பொதிகை மலை

இலக்கணக்குறிப்பு:

  • கயிலாய வெற்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  • அசலம் – காரணப்பெயர்
  • முச்சங்கம் – பண்புத்தொகை
  • வளர்கூடல் – வினைத்தொகை
  • மதிப்பிஞ்சு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • இரைதேர் – இரண்டாம் வேற்றுமைத்தொகை

முக்கூடற்பள்ளு

பள்ளு:

  • “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்.
  • பள்ளு 96 வகை சிற்றிலக்கிய வகையுள் ஒன்று.
  • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கிய வகை “பள்ளு வகை” இலக்கியத்திற்கு பொருந்தும்.

முக்கூடற்பள்ளு:

  • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
  • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
  • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
  • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
  • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.

இலக்கணக்குறிப்பு:

  • வெண்தயிர் – பண்புத்தொகை
  • காய, மாய – பெயரெச்சம்
  • நாழிகை வாரம் – உம்மைத்தொகை
  • தாபதர் உள்ளம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • செந்நெல் – பண்புத்தொகை
  • சுழி வெள்ளம் – வினைத்தொகை

மறுமலர்ச்சிப் பாடல்கள் - மாலைக்கால வருணனை

z

நூல் குறிப்பு:

  • வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரததக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்தார்.
  • பாஞ்சாலிசபதம் என்னும் இந்நூலில் அழைப்புச் சருக்கம் ,சூதாட்டச் சருக்கம், அடிமைச் சுருக்கம், துகிலுரிதற்சருக்கம், சபதச் சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்கள் உள்ளன.

பாரதியார்:

  • இவர் 1882ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் = சின்னசாமி, இலக்குமி அம்மையார்.
  • இளமையிலேய கலைமகள் என்னும் பொருள் தரும்,”பாரதி” என்னும் பட்டதை பெற்றார்.
  • இவர் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
  • இவரின் முப்பெரும் படைப்புகள் = கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு.

சொற்பொருள்:

  • பரிதி – சூரியன்
  • வண்ணம் – அழகு
  • முகில் – மேகம்
  • பொய்கை – நீர்நிலை
  • இருட்கடல் – நீலக்கடல்
  • களஞ்சியம் – தொகுப்பு

இலக்கணக்குறிப்பு;

  • படர்முகில் – வினைத்தொகை
  • செழும்பொன் – பண்புத்தொகை
  • தங்கத்தீவு – உருவகம்
  • பொற்கரை – உருவகம்
  • சுடரொளி – வினைத்தொகை

புத்தக சாலை

ஆசிரியர் குறிப்பு:

  • பாரதிதாசன் புதுவையில் 1891ஆம் ஆண்டு பிறந்தார்.
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமி அம்மாள்
  • இயற்பெயர் = சுப்புரத்தினம்
  • படைப்புகள் = குடும்ப விளக்கு, இருண்ட வீடு, தமிழியக்கம், பாண்டியன் பரிசு, இசையமுது, அழகின் சிரிப்பு, கண்ணகி புரட்சிக் காப்பியம், பிசிராந்தையார் போன்ற பல நூல்களை படைத்துள்ளார்.

சொற்பொருள்:

  • மனோபாவம் – உளப்பாங்கு
  • சகமக்கள் – உடன் வாழும் மக்கள்
  • ஒன்று – ஓரினம்
  • இலகுவது – விளங்குவது
  • சுவடி – நூல்
  • சுவடிச்சாலை – நூலகம்
  • சர்வகலாசாலை – பல்கலைக்கழகம்

இலக்கணக்குறிப்பு;

  • அன்புநெறி – இருபெயரொட்டு பண்புத்தொகை
  • உயர்எண்ணம் – வினைத்தொகை
  • செந்தமிழ் – பண்புத்தொகை
  • தருதல், வைத்தல் – தொழிற்பெயர்

காடு

ஆசிரியர் குறிப்பு;

  • வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = அரங்க திருக்காமு, துளசியம்மாள்
  • இயற்பெயர் = அரங்கசாமி என்ற எத்திராசலு
  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்.
  • இவர், “கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்” என்று அழைக்கப்படுவார்.

சொற்பொருள்:

  • வெய்யோன் – கதிரவன்
  • புரையோடி – உள்ளுக்குள் அரிக்கப்பட்டு
  • முதல் – வேர்
  • செல் – ஒருவகை கரையான்
  • சோங்கி – வாட்டமுற்று

சிக்கனம்

ஆசிரியர் குறிப்பு;

  • இவமை கவிஞர் எனப்போற்றப்படுபவர் கவிஞர் சுரதா
  • இவர் திருவாரூர் மாவட்டம் பழையனூரில் பிறந்தவர்.
  • இயற்பெயர் = இராசகோபாலன்
  • படைப்புகள் = தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும்.
  • இவர் தமிழக இயலிசை நாடகமன்றம் வழங்கிய கலைமாமணி பட்டம் பெற்றவர்.
  • இவருடைய “தேன்மழை” நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்றுள்ளது.
  • பாவேந்தர் நினைவு பரிசினை பெற்ற முதல் கவிஞர் இவரே.

சொற்பொருள்;

  • பகட்டு வாழ்க்கை – ஆடம்பரமான வாழ்க்கை
  • செட்டு – சிக்கனம்

இலக்கணக்குறிப்பு:

  • சட்டதிட்டம் – உம்மைத்தொகை
  • நீதிநூல் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீரூற்று – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • தீராத – எதிர்மறைப் பெயரெச்சம்

மனித நேயம்

ஆசிரியர் குறிப்பு;

  • கவிஞர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் 01.06.1942 இல் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = கோபால், மீனாம்பாள்
  • இவரின்”இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பரிசினை பெற்றுள்ளது.

சொற்பொருள்:

  • சிந்தை – உள்ளம்
  • குன்றி – குறைந்து
  • சாந்தி – தெருக்கள் கூடுமிடம்
  • சிறுமை – இழிவு

இலக்கணக்குறிப்பு:

  • சிந்தித்தேன் – தன்மை ஒருமை வினைமுற்று
  • கன்றுகுரல் – ஆறாம் வேற்றுமைத் தொகை
  • தலைகுனிந்து – இரண்டாம் வேற்றுமைத் தொகை

வேலைகளல்ல வேல்விகளே!

ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் தாராபாரதி 26.02.1947இல் திருவண்ணாமலை மாவட்டம் குவளை என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = துரைசாமி, புஷ்பம் அம்மாள்
  • இவர் 34 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி, நல்லாசிரியருக்கான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.
  • படைப்புகள் = புதிய விடியல்கள், விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம்.

சொற்பொருள்:

  • மூடத்தனம் – அறியாமை
  • மூலதனம் – முதலீடு

இலக்கணக்குறிப்பு;

  • வெறுங்கை – பண்புத்தொகை
  • விரல்கள் பத்தும் – முற்றும்மை
  • பாறையும் – உயர்வு சிறப்பும்மை
  • மலர்ச்சோலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  • கங்கையும் சிந்துவும் – எண்ணும்மை
  • தெற்கு வடக்காய் – முரண்தொடை
  • மாவிலி – உரிச்சொற்றொடர்

தீக்குச்சிகள்

ஆசிரியர் குறிப்பு:

  • கவிஞர் அப்துல் ரகுமான் 1937இல் மதுரையில் பிறந்தவர்.
  • இவர், “மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” எனப் பாராட்டப்படுபவர்.
  • படைப்புகள் = பால்வீதி, நேயர் விருப்பம், சொந்தச் சிறைகள், கரைகளே நதியாவதில்லை, விலங்குகள் இல்லாத கவிதை.
  • தமிழக அரசின் “பாரதிதாசன் விருது”, தமிழ்ப்பல்கலைக்கழகம் வழங்கிய, “தமிழ் அன்னை விருது” போன்ற பல பரிசினை பெற்றுள்ளார்.

இலக்கணக்குறிப்பு:


  • புல்நுனி – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கண்ணீர் வெள்ளம், பசிக்கயிறு – உருவகம்
  • மெல்லிய காம்பு – உருவகம்