Tnpsc | Tamil Current Affairs May 08 2019





Smiley face

Tnpsc | Tamil Current Affairs May 08 2019 | Selvakumar | kalvipriyan


நடப்பு நிகழ்வுகள் – மே 8 2019

முக்கியமான நாட்கள்

மே 08 – உலக செஞ்சிலுவை தினம்

  • பாரபட்சம் இன்றி பாதிக்கப்படுவோருக்கு மனிதாபிமானத்தோடு உதவ வேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் நேரிற்சென்று பணிபுரிய, பாதிப்புகளை தடுக்க அல்லது அவற்றின் பரிமாணத்தைக் குறைக்க தேசிய, சர்வதேச ரீதிகளில் செஞ்சிலுவை இயக்கம் பாடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  • செஞ்சிலுவைச் சங்கத்தை ஸ்தாபித்த ஜீன் ஹென்ரி டுனன்ட் (Jean Henri Dunant) என்பவரின் பிறந்த தினமான மே 8 ஆம் தேதியை சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
  • உலக செஞ்சிலுவை தினம் 2019 தீம் “# லவ்ஆகும்.

மே 08 – உலக தலசீமியா தினம்

  • ஒவ்வொரு ஆண்டும் மே 8-ஆம் தேதி உலக தலசீமியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. தலசீமியா குறித்த முடிவுகளையும் கொள்கைகளையும் வடிப்போருக்கும், சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கும், நோயாளிகள் மற்றும் அவர் குடும்பத்தாருக்கும், ஒட்டுமொத்தமாக சமுதாயத்துக்கும் தலசீமியா பற்றிய விழிப்புணர்வை உருவாக்க இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நோய், நடுக்கடல் பகுதி, மத்திய கிழக்கு நாடுகள், தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் பசிபிக் நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
  • தலசீமியா ஒரு மரபுவழி கடத்தப்படும் குருதிக் கோளாறு ஆகும். இரத்தப் புரதத்தை உருவாக்குவதில் பங்குபெறும் மரபணுக்கள் சிதைவதால் அல்லது இல்லாமல் இருப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. சிவப்பணுவில் காணப்படும் இரத்தப் புரதம் உடல் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் உயிர்வளியை எடுத்துச் செல்லுகிறது. இரத்தப் புரதம் இல்லாமல் இருப்பதால் அல்லது சிதைவடைவதால் சிவப்பணுக்கள் அதிக எண்ணிக்கையில் அழிந்து அதனால் இரத்தச்சோகை உண்டாகிறது.
  • 2019 தீம்:Universal access to quality thalassaemia healthcare services: Building bridges with and for patients

தேசிய செய்திகள்

ஆந்திரபிரதேசம்

வைசாக்கில் மனித நூலகம்

  • “வாழ்க்கை புத்தகம்” மூலம் உரையாடும் இந்த மனித நூலகம் எனும் நிறுவனம் முதுயிவர்கள் மற்றும் இளம் வயதினரிடம் ஒரே மாதிரியாக பாகுபாடின்றி உரையாடும். மக்களை ஆராய்ந்து, அவர்களின் கதைகளை கேட்டுக் கொள்ளாத ஒரு புதிய வகையான நூலகம் இதுவாகும். மனித நூலகம் என்பது 2000ம் ஆண்டில் கோபன்ஹேகனில் உருவாக்கப்பட்ட உலகளாவிய அமைப்பாகும்.

ராஜஸ்தான்

டெஸெர்ட் ஸ்டார்ம் 2019

  • டெஸெர்ட் ஸ்டார்ம் 2019, இந்தியாவின் மிக நீண்ட நாடுகளுக்கிடையேயான பாலைவன கார் போட்டி மே 08 அன்று தொடங்க உள்ளது. அதிக வெப்பநிலை, செங்குத்தான மலைப்பாதைகள் மற்றும் சரளை பாதை ஆகியவற்றில் பயணிக்கும் இந்தப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் எனத்தகவல்.

குஜராத்

கடல் விமானத் திட்டம்

  • குஜராத் அரசு, “ஒற்றுமை சிலை” அருகே கடல் விமானத் திட்டத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. குப்பை ரேக் [trash rack], வலை போன்ற அமைப்பை நிறுவவுள்ளது, இது நர்மதா நீர்த்தேக்கத்தின் அருகாமையில் உள்ள முதலைபண்ணையிலிருந்து முதலைகள் உள்ளே வராமல் தடுக்கிறது.

சர்வதேச செய்திகள்

ஆர்க்டிக் கவுன்சிலின் பார்வையாளராக இந்தியா மீண்டும் தேர்வு

  • ஆர்க்டிக் கவுன்சிலின் அரசுகளுக்கு இடையிலான மன்றத்தின் பார்வையாளராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆர்க்டிக் மாநிலங்களுக்கு இடையில் பொதுவான பிரச்சினைகள், குறிப்பாக நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்புகளை ஊக்குவிக்கிறது ஆர்க்டிக் கவுன்சில்.

பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கையைப் பற்றிய திரைப்படம்

  • வங்கதேச விடுதலைப் போரின் ஆவணப்படம், பங்கபந்து ஷேக் முஜிபூர் ரஹ்மானின் வாழ்க்கையைப் பற்றிய படைப்புகளை திரைப்படமாக இந்தியா, வங்கதேசம் இணைந்து தயாரிக்க உள்ளது.

ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து வெளியேற முடிவு

  • சர்வதேச சக்திகளுடனான அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து ஓரளவு வெளியேற ஈரான் அறிவிக்க உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி ஒரு வருடம் ஆன நிலையில் இந்த நகர்வு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம் & பொருளாதாரம்

அமெரிக்கசீனா இடையே உள்ள பதட்டத்தினால் உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்

  • அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய வர்த்தக அழுத்தங்கள் குறித்து கவலை தெரிவித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட். அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள பதட்டங்கள் உலகப் பொருளாதாரத்திற்கு முக்கிய அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியுள்ளார்.

மாநாடுகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) துறை பங்குதாரர்களுடன் எம்.என்.ஆர்.. ‘சின்டன் அமர்வு[பைதக்]’ நடத்தியது

  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை பங்குதாரர்களுடன் ‘சின்டன் அமர்வு[பைத்தக்]’ நடத்தியது. இந்த கூட்டத்திற்கு எம்.என்.ஆர்.இ. செயலாளரான ஆனந்த் குமார் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் முக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டாளர்கள், உபகரண உற்பத்தியாளர்கள், நிதியுதவியாளர்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள், சிந்தனையாளர்கள், தொழிற்துறை அமைப்புகள் மற்றும் திறமை மேம்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.