Tnpsc/11/Tamil-4

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

பிள்ளைத்தமிழ்:

  • கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர் தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு பருவத்துக்குப் பத்து ஆசிரிய விருத்தம் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
  • பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • இது ஆண்பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.
  • ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
  • பெண்பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள் = காப்பு, செங்கீரை, தாள், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, நீராடல், ஊசல்.

குமரகுருபரர்:

  • முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் பாடியவர் குமரகுருபரர்.
  • தாமிரபரணி நதிக்கரையில் உள்ள திருவைகுன்டத்தில் பிறந்தார்.
  • பெற்றோர் = சன்முகசிகாமணி கவிராயர், சிவகாமசுந்தரி.
  • பிறந்தது முதல் ஐந்து ஆண்டுகள் பேசாமல் இருந்தார்.
  • திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசும் திறம் பெற்றார்.
  • நூல்கள் = கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறிவிளக்கம், காசிக் கலம்பகம் முதலான பல நூல்கள்.

சொற்பொருள்:

புலராமே – வறண்டு விடாமல்கம்முதல் – குரல் தேய்ந்து மங்குதல்
விரல் – பெருவிரல்சிவவாமே – சிவக்காமல்
அஞ்சனம் – கண்மைகலுழ்தல் – அழுதல்
தாள் – கால்வயித்தியநாதபுரி – புள்ளிருக்குவேளூர்

இலக்கணக்குறிப்பு:

மெல்லிதழ் – பண்புத்தொகைமென்குரல் – பண்புத்தொகை
நுண்டுளி – பண்புத்தொகைகண்மலர் – உருவகம்
பொழி திருமுகம் – வினைத்தொகைஆடுக – வியங்கோள் வினைமுற்று

பெத்தலகேம் குறவஞ்சி

குறவஞ்சி:

  • குறவஞ்சி என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • தொல்காப்பியர் கூறும் வனப்பு என்பதுள் குறவஞ்சி அடங்கும்.
  • உலாப் போகும் மன்னனையோ தெய்வத்தையோ கண்டு தலைவி காதல் கொண்டு, அதனால் மனம் நலிவதும், வீதியிலே குறத்தி வருகையும், தலைவி அவளை அழைத்து குறி கேட்பதும், குறத்தி தலைவியின் கையைப் பார்த்து கைக்குறி, முகக்குறி, பல்லிசொல் போன்றவற்றை கூறுவது போல் அமையப்பெறும்.
  • குறவஞ்சி நாடக வடிவில் அமையப்பெறும்.

நூல் குறிப்பு:

  • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னர் இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
  • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.

ஆசிரியர் குறிப்பு:

  • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
  • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
  • ஊர் = திருநெல்வேலி
  • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
  • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
  • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.

சொற்பொருள்:

  • ஏகன் – இறைவன்
  • தற்பரன் – இறைவன்

இலக்கணக்குறிப்பு;

  • அருந்தவம் – பண்புத்தொகை
  • தானதர்மம் – உம்மைத்தொகை
  • பேய்க்கணங்கள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • அமைந்த, கொடுத்த – பெயரெச்சம்

மறுமலர்ச்சிப் பாடல்கள் - எந்நாளோ?

ஆசிரியர் குறிப்பு:

  • “பண்டைநலம் புதுப்புலமை பழம்பெருமை அத்தனையும் படைப்பாய் இந்நாள்! தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறுந் துடித்தெழுந்தே” என்பார் பாவேந்தர்.
  • பெற்றோர் = கனகசபை, இலக்குமியம்மாள்
  • ஊர் = புதுச்சேரி
  • தமிழ்நாட்டு இரசூல் கம்சதோவ் எனப் பாராட்டப்பட்டவர்.
  • நூல்கள் = குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, இருண்டவீடு, தமிழச்சியின் கத்தி, சேரதாண்டவம், பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்ற பல.
  • “வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்ற அவரின் தமிழ் வாழ்த்துப் பாடல் புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாடப்பட்டு வருகிறது.
  • குயில் என்ற இலக்கிய இதழை நடத்தினார்.
  • “புதுவைக் குயில்” என்றும் இவரை அழைப்பர்.

சொற்பொருள்:

  • உன்னதம் – உயர்வு
  • இமமலை – இமயமலை
  • கீர்த்தி – புகழ்
  • பண் – பாடல்

இலக்கணக்குறிப்பு:

  • அருந்தமிழ்  - பண்புத்தொகை
  • புதுக்குநாள் – வினைத்தொகை
  • பகர்வார் – வினையாலணையும் பெயர்
  • தண்கடல் – பண்புத்தொகை

பூக்கட்டும் புதுமை

முடியரசன்:

  • பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுள் மூத்தவர் இவர்.
  • ஊர் = மதுரை
  • பெற்றோர் = சுப்புராயலு, சீதாலட்சுமி
  • இயற்பெயர் = துரைராசு
  • தந்தை பெரியாரிடமும், அறிஞர் அண்ணாவிடமும் நெருங்கிப் பழகியவர்.
  • சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்.
  • தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
  • காரைக்குடி மீனாட்சி சுந்தரம் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றினார்.
  • நூல்கள் = பூங்கொடி, காவியப்பாவை.
  • பூங்கொடி என்னும் காவியம் தமிழக அரசின் பரிசை பெற்றது.
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் கவியரசு என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

சொற்பொருள்:

  • ஈர்க்கின்ற – கவர்கின்ற
  • புலம் – அறிவு
  • புல்லடிமை – இழிவைச் சேர்க்கும் அடிமைத்தனம்

இலக்கணக்குறிப்பு:

  • பூக்கின்ற, ஈர்க்கின்ற – பெயரெச்சம்
  • செங்கதிர் – பண்புத்தொகை
  • புல்லடிமை – பண்புத்தொகை
  • காகிதப்பூ – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

விடுதலை விளைத்த உண்மை

கண்ணதாசன்;

  • “மாற்றம் எனது மானிடத் தத்துவம்” எனப் பாடியவர்.
  • பிறந்த ஊர் = சிறுகூடல்பட்டி
  • தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர்.
  • பெற்றோர் = சாத்தப்பன், விசாலாட்சி
  • இயற்பெயர் = முத்தையா
  • இதழ்கள் = தென்றல், தென்றல்திரை, சண்டமாருதம், முல்லை, கண்ணதாசன்

சொற்பொருள்:

  • தட்டின்றி – குறையின்றி
  • மூவாத – மூப்படையாத
  • மீன் – விண்மீன்
  • தளை – விலங்கு
  • வதிபவர் – வாழ்பவர்
  • மிடிமை – வறுமை

தளை

சிற்பி பாலசுப்பிரமணியம்:

  • இவரின் ஊர் = கோவை மாவட்டம் பொள்ளாச்சி
  • பெற்றோர் = பொன்னுசாமி, கண்டியம்மாள்
  • கருத்தோவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்
  • பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் தலைவராகப் பணியாற்றியவர்.
  • கவிதை நூல்கள் = சிரித்த முத்துக்கள், நிலவுப்பூ, ஒளிப்பறவை, சூரிய நிழல், ஆதிரை.
  • உரைநடை நூல்கள் = இலக்கியச் சிந்தனை, மலையாளக் கவிதை, அலையும் சுவடும், ஒரு கிராமத்து நதி.
  • “ஒரு கிராமத்து நதி” என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றார்.
  • தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூல்பரிசு பெற்றுள்ளார்.

கண்

நா.காமராசன்:

  • பிறந்தது = மதுரை மாவட்டம் போடி-மீனாட்சிபுரம் கிராமம்.
  • பெற்றோ = நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள்.
  • மறுமலர்ச்சி யுகந்தின் கவிஞராக திகழ்ந்தவர்.
  • கிராமிய சந்தங்களுடன் புதுப்பார்வை திகழப் படிமக் கவிதைகள் பலவற்றை எழுதியுள்ளார்.
  • இவரின் “கருப்பு மலர்கள்” என்னும் தொகுப்பு நூல், கவிதை உலகில் ஒரு திருப்பத்தை உருவாக்கியது.
  • படைப்புகள் = சூரியகாந்தி, சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும்.

இலக்கணக்குறிப்பு:

  • பகல்பூக்கள் – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • புருவக்கொடி – உருவகம்
  • மனப்பறவை – உருவகம்

தண்ணீர் வங்கிகள்

ந.கருணாநிதி:

  • கவிஞர் ந.கருணாநிதி 28.03.1939இல் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர்.
  • பெற்றோர் = நடேசன், சிவகாமியம்மாள்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
  • பூவிருந்தவல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
  • இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியுள்ளார்.
  • இவரின் கவிதை தொகுப்பு = நமக்குள்ளே மலரட்டும் நல்லிணக்கம்

இலக்கணக்குறிப்பு:


  • இணையிலாப் பசுமை – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • இலா – இடைக்குறை
  • வான்மழை – ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை