Tnpsc/11/Tamil-5

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

வழிபாட்டுப் பாடல்கள் - சிவபெருமான்

திருநாவுக்கரசர்:

  • சைவத் திருமுறைகளுள் முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் ஆகும்.
  • அவற்றுள் 4,5,6 ஆகிய திருமுறைகள் திருநாவுக்கரசர் பாடியது.
  • திருநாவுக்கரசர் தென்னார்காடு மாவட்டம், திருவாமூர் என்னும் ஊரில் பிறந்தார்.
  • பெற்றோர் = புகழனார், மாதினியார்,இவரின் தமக்கையார் = திலகவதியார்
  • இயற்பெயர் = மருள் நீக்கியார்
  • இவரின் வேறு பெயர்கள் = வாகீசர், அப்பர்
  • சைவநெறியில் தோய்ந்த இவர் சாதி வேற்றுமைகளைத் களைய முற்பட்ட சமுதாயப் பற்றாளர்.
  • இவர் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்னும் திருவாக்கைத் தந்தவர்.
  • காலம் = கி.பி.ஏழாம் நூற்றாண்டு

சொற்பொருள்:

  • நமன் – எமன்
  • நடலை – இறப்பு
  • பிணி – நோய்
  • ஏமாப்பு – பாதுகாப்பு

திருமால்

ஆண்டாள்:

  • ஆண்டாள் அருளியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி.
  • திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்பர்.
  • நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
  • பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • பாவை என்பது இருமடியாகு பெயர்.
  • திருப்பாவை பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சார்ந்தவை.
  • இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
  • இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்.

சொற்பொருள்:

  • ஆழி – கடல், சக்கரம்
  • சார்ங்கம் – வில்
  • பாழி – வலிமை

இலக்கணக்குறிப்பு;

  • கரவேல் – எதிர்மறை ஏவல் வினைமுற்று
  • உதைத்த – பெயரெச்சம்

இயேசுபிரான்

எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை:

  • இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர்.
  • பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை
  • ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும்
  • படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணியமனோகரம், இரட்சணிய யாத்திரிகம்.
  • இரட்சணியமனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல்.
  • இவரை “கிறித்துவக் கம்பர்” என்பர்.

சொற்பொருள்:

  • துசங்கட்டுதல் – விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.

இலக்கணக்குறிப்பு:

  • பெருங்குணம் – பண்புத்தொகை
  • கட்டும் – செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்

புத்தர்

புத்தமித்திரர்:

  • வீரசோழியம் ஒரு ஐந்திலக்கணம் கூறும் நூல்.
  • வீரராசேந்திர சோழன் விருப்பத்திற்கு ஏற்பப் புத்தமித்திரர் பாடியது.
  • இந்நூலுக்கு பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.

சொற்பொருள்:

  • இருவினை – நல்வினை, தீவினை
  • பரவுதும் – யாம் தொழுதும்
  • ஓங்குநீர் – கடல்
  • முப்பகை – காமம், வெகுளி, மயக்கம்
  • முனிவர் – துறவி

இலக்கணக்குறிப்பு:


  • பரவுதும் – தன்மைப் பன்மை வினைமுற்று
  • நிழல் போதி – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நீங்கா இன்பம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • யாவரும் – முற்றும்மை
  • வீற்றிருந்த – பெயரெச்சம்
  • வினைப்பிணி – உருவகம்