Tnpsc/12/Tamil-1

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

கடவுள் வாழ்த்து

ஆசிரியர் குறிப்பு:

  • கம்பர் சோழ நாட்டுத் திருவழுந்தூரில் பிறந்தவர்.
  • இவரின் காலம் கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு.
  • கம்பரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் என்பார் ஆதரித்து வந்தார்.
  • “கவிச்சக்ரவர்த்தி” எனப் போற்றப்படுபவர் கம்பர்.
  • “கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்னும் தொடர்கள் அவர்தம் பெருமையை விளக்குகின்றன.
  • நூல்கள் = சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சிலை எழுபது, திருக்கை வழக்கம், சரஸ்வதி அந்தாதி.

நூற் குறிப்பு:

  • வடமொழியில் வான்மீகி முனிவர் இயற்றிய இராமாயணத்தை தழுவி, தமிழில் கவிப் பேரரசர் கம்பர் இயற்றியது கம்பராமாயணம்.
  • கம்பரால் இயற்றப்பட்டதால் “கம்பராமாயணம்” என வழங்கப்படுகின்றது.
  • கம்பர் தம்நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”

சொற்பொருள்:

  • ஒன்றேயென்னின் – ஒன்றே என்று கூறின்
  • நம்பி – இறைவன்

இலக்கணக்குறிப்பு:

  • வாழ்க்கை – தொழிற்பெயர்
  • அம்மா – வியப்பிடைச்சொல்

மொழி வாழ்த்து

நூல் குறிப்பு:

  • தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை இயற்றியது “தமிழரசி குறவஞ்சி”.
  • 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று.
  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான்.
  • தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு:

  • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை.
  • பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
  • இவர் விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.
  • கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர்.
  • “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார்.
  • கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
  • தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க இந்நூலை இயற்றினார்.
  • இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொது ஞானியரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.

சொல்பொருள்:

  • நண்ணும் – கிட்டிய
  • இசைத்த – பொருந்தச் செய்த
  • வண்ணம் – ஓசை
  • பிறமொழி – வேற்றுமொழி
  • வண்மை – வளமை

இலக்கணக்குறிப்பு:

  • அசைத்த, இசைத்த – பெயரெச்சம்
  • உலகம் – இடவாகுபெயர்
  • திருந்துமொழி – வினைத்தொகை
  • வாழிய – வியங்கோள் வினைமுற்று
  • அடிவாழ்த்துவம் – இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • வாழ்த்துவம் – தன்மைப் பன்மை வினைமுற்று

நாட்டு வாழ்த்து

நூல் குறிப்பு:

  • “நாமக்கல் கவிஞர் பாடல்கள்” என்னும் நூலில் கவிஞரின் பாடல்கள் பல தொகுக்கப்பட்டுள்ளது.
  • கவிஞர் சத்தியாகிரகத் தொண்டர்கள் பாடுவதற்கென இயற்றிய சில பாடல்கள் “என்னுடைய நாடு” என்னும் தலைப்பில் தேசிய மலரில் இடம் பெற்றுள்ளன.

ஆசிரியர் குறிப்பு:

  • இயற் பெயர் = இராமலிங்கனார்
  • பெற்றோர் = வெங்கடராமன், அம்மணியம்மாள்
  • இவற் முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் சிறந்தவர்.
  • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தார்.
  • தமிழக அரசு இவரை சட்ட மேலவை உறுபினராக நியமித்தது.
  • நடுவண் அரசு இவருக்கு “பத்மபூஷன்” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.

சொற்பொருள்:

  • வாடின – தளர்ந்த
  • ஓடின – மறைந்தன

இலக்கணக்குறிப்பு:

  • தினந்தினம் – அடுக்குத்தொடர்
  • வந்தவர் – வினையாலணையும் பெயர்
  • போனவர் – வினையாலணையும் பெயர்
  • இல்லாதவர் – எதிர்மறை வினையாலணையும் பெயர்
  • யாரையும் – முற்றும்மை

புறநானூறு

நூல் குறிப்பு;

  • புறம் + நான்கு + நூறு = புறநானூறு
  • இந்நூலை புறப்பாட்டு, புறம் எனவும் அழைப்பர்.
  • நானூறு பாடல்கள் உள்ளன.
  • இதனை தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
  • இந்நூலின் 11 புறத்திணைகளும், 65 துறைகளும் எடுத்தாளப்பட்டுள்ளன.
  • ஜி.யு.போப் இந்நூலின் சில பாடல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் குறிப்பு:

  • நரிவெரூஉத் தலையார்.
  • இவரால் பாடப்பட்டவன் சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும் பொறை ஆவான்.
  • இவர் இயற்றிய பாடல்கள் குறுந்தொகையிலும், திருவள்ளுவமாலையிலும் உள்ளன.

சொற்பொருள்:

  • கயன்முள் – மீன்முள்
  • திரைகவுள் – சுருக்கங்களை உடைய கன்னம்
  • கணிச்சி – மழுவாயுதம்
  • திறல் – வலிமை
  • ஒருவன் – எமன்
  • ஆறு – நெறி

இலக்கணக்குறிப்பு:

  • கயன்முள் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • திரைகவுள் – வினைத்தொகை
  • கூர்ம்படை – பண்புத்தொகை
  • ஆற்றீர் – முன்னிலை பன்மை எதிர்மறை வினைமுற்று
  • படூஉம் – இசைநிறை அளபெடை

அகநானூறு

நூல் குறிப்பு:

  • அகம் + நான்கு + நூறு = அகநானூறு
  • அடி எல்லை = 13 முதல் 31
  • நானூறு பாடல்கள் உள்ளன.
  • தொகுத்தவர் = மதுரை உப்பூரி குடிகிழார் மகன் உருதிரசன்மனார்
  • தொகுபித்தவர் = பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  • வேறுபெயர்கள் = அகம், நெடுந்தொகை
  • இந்நூலில் மூன்று பகுதிகள் உள்ளன.
  • முதல் 120 பாடல்கள், “களிற்றியானை நிறை” எனப்படும்.
  • அடுத்த 180 பாடல்கள், “மணிமிடை பவளம்” எனப்படும்.
  • கடைசி 100 பாடல்கள் “நித்திலக்கோவை” எனப்படும்.
  • 1,3,5 என ஒற்றைப்படை எண்கள் அமைந்த பாடல்கள் = பாலைத்திணை பாடல்கள்
  • 2,8 என வரும் பாடல்கள் = குறிஞ்சித்திணை பாடல்கள்
  • 4,14 என வரும் பாடல்கள் = முல்லைதினைப் பாடல்கள்
  • 6,16 என வரும் பாடல்கள் = மருதத்திணை பாடல்கள்
  • 10,20 என வரும் பாடல்கள் = நெய்தல் திணை பாடல்கள்.

சொற்பொருள்:

  • பசை – ஓட்டும் பசை(ஈரம்)
  • பச்சை – தோல்
  • மாச்சிறைப் பறவை – கரிய சிறகுகள் உடைய வௌவால்
  • முதுமரம் – பழையமரம்
  • முகை – மொட்டு
  • கடிமகள் – மணமகள்
  • கதப்பு – கூந்தல்
  • தண்பதம் – குளிர்பதம்

இலக்கணக்குறிப்பு:


  • உயர்சினை – வினைத்தொகை
  • சிறைப்பறவை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • பகலுறை – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • முதுமரம் – பண்புத்தொகை
  • கடிமகள் – உரிச்சொற்றொடர்
  • புல்லார் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • வல்விரைந்து – ஒருபொருட்பன்மொழி