Tnpsc/12/Tamil-2

Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan

நற்றிணை

நூல் குறிப்பு:

  • நன்மை + திணை = நல் + திணை = நற்றிணை
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்றது நற்றிணை.
  • நானூறு பாடல்கள் உள்ளன.
  • அடி எல்லை = 9 முதல் 12
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • தொகுத்தவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

ஆசிரியர் குறிப்பு:

  • நக்கண்ணையார் பெண்பாற் புலவர் ஆவார்.
  • இவர்  “பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணை” என் கூறப்படுபவர்.
  • உறையூர் வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவைக் கோப்பெருநற்கிள்ளி ஆவான்.
  • அவன் தன் தந்தையோடு பகைத்துக் கொண்டு நாடிழந்து, வறுமையில் புல்லரிசிக் கூழுண்டு வாழ்ந்து வந்தான்.
  • அந்நிலையிலும் ஆமூர் மல்லன் என்பவனை போரில் வெற்றி கொண்டான்.
  • அவன் வீரத்தைக் கண்ட நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணந்து கொள்ள விரும்பியதாக அவர் பாடிய புறநானூற்று 83,84,85 ஆம் பாடல்கள் மூலம் அறியலாம்.

சொற்பொருள்:

  • இறவு – இறாமீன்
  • முதல் – அடி
  • பிணர் – சருச்சரை(சொர சொரப்பு)
  • தடவு – பெருமை
  • சுறவு – சுறாமீன்
  • கொடு – கொம்பு
  • மருப்பு – தந்தம்
  • உழை – பெண்மான்
  • உரவு – வலிமை

இலக்கணக்குறிப்பு:

  • இறவுப்புறம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • களிற்று மருப்பு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • முள்ளிலை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க்க தொகை
  • நன்மான், நெடுந்தேர் – பண்புத்தொகை
  • செலீஇய – சொல்லிசை அளபெடை

குறுந்தொகை

நூல் குறிப்பு:

  • குறுமை + தொகை = குறுந்தொகை
  • அடி எல்லை = 4 முதல் 8
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • நானூற்றி ஒரு பாடல் உள்ளன.

ஆசிரியர் குறிப்பு:

  • கபிலர் பாண்டி நாட்டிலுள்ள திருவாதவூரில், அந்தணர் மரபில் பிறந்தவர்.
  • கடையெழு வள்ளல்களுள் ஒருவனான பாரியை உயிர்த் தோழராக கொண்டவர்.
  • பாரியின் அவைகளப் புலவராக விளங்கியவர்.
  • இவர் குருஞ்சித் திணை பாடல்கள் பாடுவதில் வல்லவர்.

கபிலரை பற்றிய புகழுரைகள்:

  • நக்கீரர் = வாய்மொழிக் கபிலன்
  • பெருங்குன்றூர்க் கிழார் = நல்லிசைக் கபிலன்
  • பொருந்தில் இளம்பூரனார் = வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
  • மாறோக்கத்து நப்பசலையார் = புலனழுக்கற்ற அந்தணாளன், பொய்யா நாவிற் கபிலன்

சொற்பொருள்:

  • ஒழுகுநீர் – ஓடுகின்ற நீர்
  • ஆரல் – ஆரல் மீன்
  • குருகு – நாரை

இலக்கணக்குறிப்பு:

  • யாரும் – முற்றும்மை
  • ஒழுகுநீர் – வினைத்தொகை
  • குருகும் – இழிவு சிறப்பும்மை

ஐங்குறுநூறு

நூல் குறிப்பு:

  • ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
  • அடி எல்லை = 3 முதல் 6
  • ஐநூறு பாடல்கள் உள்ளன.
  • ஒவ்வொரு தினைக்கும் நூறு பாடல்கள் உள்ளன.
  • குருஞ்சித் திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
  • முல்லைத் திணை பாடல்கள் பாடியவர் = பேயன்
  • மருதத் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
  • நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
  • பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
  • இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  • தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
  • தொகுபிதவர் = சேரமான் யானைக் கட்சேய்மாந்தரஞ் சேரலிரும்பொறை

ஆசிரியர் குறிப்பு:

  • ஆந்தையார் என்பது இயற்பெயர்.
  • ஓதலூர் என்னும் ஊர்.
  • ஓதலூர் மேலைக் கடற்கரைக் பகுதியில் குட்டநாட்டில் உள்ளது.
  • ஆந்தை என்பது ஆதன் தந்தை என்பதன் மரூஉ.

சொற்பொருள்:

  • மறு – குற்றம்
  • தூவி – இறகு
  • மரபு – முறைமை
  • ஓதி – கூந்தல்
  • கிளை – சுற்றம்
  • ஊன் – தசை
  • நிணம் – கொழுப்பு
  • வல்சி – உணவு
  • போலாம் – பொன்
  • விறல் – வலிமை

இலக்கணக்குறிப்பு:

  • பச்சூன், பைந்நிணம் – பண்புத்தொகை
  • பொலம்புனை – மூன்றாம் வேற்றுமைத்தொகை
  • புனைகலம் – வினைத்தொகை
  • வேற்காளை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • காளை – உவமையாகுபெயர்

திருக்குறள்

நூல் குறிப்பு:

  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகுபெயர்
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும்பிரிவுகளை கொண்டது.
  • அறத்துப்பால் = பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களும் 38 அதிகாரங்களையும் கொண்டது.
  • பொருட்பால் = அரசியல், அங்கவியல், ஒழிபியல் என் 3 இயல்களும், 70 அதிகாரங்களையும் கொண்டது.
  • இன்பத்துப்பால் = களவியல், கற்பியல் என் 2 இயல்களும், 25அதிகாரங்களையும் உடையது.
  • திருக்குறளின் வேறு பெயர்கள் = முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி.
  • திருவள்ளுவரின் வேறு பெயர்கள் = நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்.

சொற்பொருள்:

வையகம் – உலகம்நன்றி – நன்மை
தினை – மிகச் சிறிய அளவுபனை – ஒரு பேரளவு
சால்பு – நிறைபண்புகேண்மை – நட்பு
மாசு – குற்றம்விழுமம் – துன்பம்
அகழ்வாரை – தோண்டுபவரைதலை – சிறந்த அறமாகும்
பொறுத்தல் – மன்னிக்கஇன்மை – வறுமை
ஓரால் – நீக்குதல்வன்மை – வலிமை
மடவார் – அறிவிலிகள்பொறை – பொறுத்தல்
விருந்து – புதியராய் வந்தவர்நிறை – சால்பு
பொன்றும் – அழியும்அற்றம் – அழிவு
அரண் – கோட்டைஓரீஇ – நீக்கி
ஒட்பம் – அறிவுடைமைகூம்பல் – குவிதல்
அதிர – நடுங்கும் படிநோய் – துன்பம்
திட்பம் – வலிமைஊறு – பழுதுபடும் வினை
ஒரால் – செய்யாமைஆறு – நெறி
கோள் – துணிபுகொட்க – புலப்படும் படி
வீறு – செய்தல்திண்ணியர் – வலியர்

இலக்கணக்குறிப்பு:

செய்யாமல் – எதிர்மறை வினையெச்சம்செய்த – இறந்தகால பெயரெச்சம்
வையகமும் வானகமும் – எண்ணும்மைதூக்கார் – முற்றெச்சம்
தூக்கின் – எதிர்கால பெயரெச்சம்செயின் – வினையெச்சம்
தெரிவார் – வினையாலணையும் பெயர்சால்பு – பண்புப்பெயர்
மறவற்க – எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுஎழுபிறப்பும் – முற்றும்மை
துடைத்தவர் – வினையாலணையும் பெயர்உள்ள – வினையெச்சம்
கொன்றார் - வினையாலணையும் பெயர்அகழ்வார் - வினையாலணையும் பெயர்
பொறுத்தல் – தொழிற்பெயர்விருந்து – பண்பாகு பெயர்
ஒரால், பொறை – தொழிற்பெயர்நீங்காமை – எதிர்மறை தொழிற்பெயர்
போற்றி – வினையெச்சம்ஒருத்தார் - வினையாலணையும் பெயர்
செய்தாரை - வினையாலணையும் பெயர்துறந்தார் - வினையாலணையும் பெயர்
இன்னா சொல் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்உண்ணாது – எதிர்மறை வினையாலணையும் பெயர்
அற்றம் – தொழிற்பெயர்ஓரீஇ – சொல்லிசை அளபெடை
உய்ப்பது - வினையாலணையும் பெயர்எண்பொருள் – பண்புத்தொகை
கூம்பல் – தொழிற்பெயர்அறிகல்லாதவர் – வினையாலணையும் பெயர்
அஞ்சுவது - வினையாலணையும் பெயர்அஞ்சல் – தொழிற்பெயர்
அதிர – வினையெச்சம்உடையார் – குறிப்பு வினைமுற்று
மனத்திட்பம் – ஆறாம் வேற்றுமைத்தொகைஒல்காமை – தொழிற்பெயர்
ஏற்றா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்சொல்லுதல் – தொழிற்பெயர்
யார்க்கும் – முற்றும்மைஎளிய – குறிப்பு வினைமுற்று
எய்தி – வினையெச்சம்மாண்டார் - வினையாலணையும் பெயர்

சிலப்பதிகாரம்

நூல் குறிப்பு:

  • இக்காப்பியம், “முத்தமிழ்க் காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம்” என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால் பாராட்டப்படுகிறது.
  • கண்ணகியின் காற்சிலம்பு காரணமாக வளர்ந்த கதையாதலினால் சிலப்பதிகாரம் எனப் பெயர்பெற்றது.
  • இதுவே தமிழின் முதல் காப்பியம்.
  • புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும், மங்கள வாழ்த்துப் பாடல் முதலாக வரந்தருகாதை ஈறாக முப்பது காதைகளையும் உடையது.
  • நூல் கூறும் மூன்று உண்மை = அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்.

ஆசிரியர் குறிப்பு:

  • இந்நூலை இயற்றியவர் இளங்கோவடிகள்
  • பெற்றோர் = இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், நற்சோனை
  • தமையன் = சேரன் செங்குட்டுவன்
  • காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
  • இந்நூலுக்கு உரையெழுதிய பழைய உரையாசிரியர்கள் இருவர். ஒருவர் அரும்பதங்களுக்கு மட்டும் உரை எழுதிய அரும்பத உரைகாரர். மற்றொருவர் விளக்கமாக உரை எழுதிய அடியார்க்கு நல்லார்(இவர் உரை முழுவதுமாக கிடைக்கவில்லை)
  • இக்காலத்தே வாழ்ந்த ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை நூல் முழுமைக்கும் உள்ளது.

நூல் சிறப்பு:

  • பாரதியார் இந்நூலின் அருமை பெருமைகளை உணர்ந்து, “நெஞ்சையள்ளும் சிலம்பு” எனப் புகழ்ந்துள்ளார்.
  • கவிமணி இந்நூலை, “தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தோறும் சிலப்பதிகாரம்” எனப் பாராட்டியுள்ளார்.

சொற்பொருள்:

  • வெய்யோன் – கதிரவன்
  • ஈர்வளை – அறுத்து செய்யப்பட்ட வளையல்
  • இலங்கு – ஒளிருகின்ற
  • தோளி – கண்ணகி
  • முறை – நீதி
  • நிறை – கற்பு
  • படுகாலை – மாலைக்காலம்
  • மாதர் – காதல்
  • மல்லல் – வளம்
  • கொற்றம் – அரசியல்
  • வைவாள் – கூரியவாள்
  • பழுது – உடல்

இலக்கணக்குறிப்பு:


  • ஈர்வளை – வினைத்தொகை
  • கையேந்தி – ஏழாம் வேற்றுமைத்தொகை
  • காற்சிலம்பு – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • நல்லுரை – பண்புத்தொகை
  • தண்குடை – பண்புத்தொகை
  • பொற்சிலம்பு – மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • மாமதுரை – உரிச்சொற்றொடர்
  • வைவாள் – உரிச்சொற்றொடர்
  • வளைக்கை – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை