Tamil Reading 6th Std | Kalvipriyan-2

html> kalvipriyan Online Test January 2018 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


Tokyo is the capital of Japan.

London is the capital city of England.


பறவைகள் பலவிதம்

.
  • திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே.
  • உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் “பறவைகள் சரணாலயம்”
  • அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக பறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது “வலசை போதல்” என்பர்.
  • பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
  • ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.
  • வயல்வெளிகளில் பயிர்களைத் தாகும் பூச்சிகள், வண்டுகளைப் பறவைகள் தின்று, விவசாயிகளுக்கு உதவுகின்றன.
  • நம் நாட்டில் ஏறத்தாழ 2400 வகை பறவைகள் உள்ளன.
  • பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.
  • . .
  • தேனை குடித்து வாழும் பறவைகள்
  • பழத்தை உண்டு வாழும் பறவைகள்
  • பூச்சியை தின்று வாழும் பறவைகள்
  • வேட்டையாடி உண்ணும் பறவைகள்
  • இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
  • பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
  • சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்:
    • மஞ்சள் சிட்டு, செங்காகம், சுடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
    .
  • நீர்நிலைகளில் வாழும் சில பறவைகள்:
    • கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.
    .
  • மலைகளில் வாழும் சில பறவைகள்:
    • இருவாச்சி, செந்தலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவாரன், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.
    .
  • தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13

  • பாம்புகள்

    .
  • பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.
  • சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.
  • பாம்பினம் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
  • உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன.
  • 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
  • பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.
  • பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும் தான் தன்னுடைய எச்சிலில் நஞ்சு வைத்துள்ளது.
  • பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செயல்படும்.
  • வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை “விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படும்.
  • பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • இந்தியாவிலுள்ள இராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. இராஜநாகம் மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.
  • ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும் என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று. கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத் திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.
  • பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் பாம்பு அவ்வாறு செய்கிறது.
  • நல்ல பாம்பின் நநஞ்சு கோப்ராக்சின் (cobrozincobrozin) எனும் வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  • இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972இன்படி, தோலுக்காகப் பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.

  • நான்மணிக்கடிகை

    சொற்பொருள்:

    .
  • மடவாள் = பெண்
  • தகைசால் = பண்பில் சிறந்த
  • உணர்வு = நல்லெண்ணம்
  • நூல் குறிப்பு:

    .
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • கடிகை என்றால் அணிகலன்(நகை)
  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
  • ஒவ்வொரு பாட்டுக்கும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.
  • ஆசிரியர் குறிப்பு:

    .
  • பெயர் = விளம்பிநாகனார்
  • விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
  • ஆராரோ ஆரிரரோ

    .
  • தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது “நாட்டுப்புற பாடல்”.
  • எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் “வாய்மொழி இலக்கியம்” என்பர்.
  • கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புற பாடலே.
  • நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்
  • தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.
  • வீரச்சிறுவன்

    .
  • ஜானகிமணாளன் எழுதிய “அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது.
  • பதினைந்து வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அச்சிறுவனே விவேகானந்தர்.
  • விவேகானந்தரின் இயற்பெயர் = நரேந்திரதத்.
  • புரட்சி துறவி = வள்ளலார்
  • வீரத் துறவி = விவேகானந்தர்
  • இசையமுது

    சொற்பொருள்:

    .
  • புனல் = நீர்
  • பொடி = மகரந்தப் பொடி
  • தழை = செடி
  • தலையா வெப்பம் = பெருகும் வெப்பம்/குறையா வெப்பம்
  • தழைத்தல் = கூடுதல், குறைதல்
  • ஆசிரியர் குறிப்பு:

    .
  • புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் பாரதிதாசன்.
  • இயற் பெயர் = கனகசுப்புரத்தினம்
  • பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
  • நூல்கள்:


    .
  • பாண்டியன் பரிசு
  • அழகின் சிரிப்பு
  • குடும்ப விளக்கு
  • காலம்:29.04.1891 – 21.04.1964