Tamil Reading pages 9 th std

kalvipriyan Online Test January 2018 Smiley face

welcome to Current Affairs Online Test | Selvakumar | kalvipriyan


Tokyo is the capital of Japan.

London is the capital city of England.


மணிமேகலை

சொற்பொருள்:

.
  • ஆயம் – தோழியர் கூட்டம்
  • ஆசனம் – இருக்கை
  • நாத்தொலைவில்லை – சொல் சோர்வின்மை
  • யாக்கை – உடல்
  • பிணி நீங்கா – நீங்கா நோய்
  • பேதைமை – அறியாமை
  • செய்கை – இருவினை
  • உணர்வு – அறிவியல் சிந்தனை
  • அரு – உருவமற்றது
  • உறு – வடிவம்
  • வாயில் – ஐம்பொறிகள்
  • வேட்கை – விருப்பம்
  • பவம் – பயன் நோக்கிய செயல்
  • கொடு – கொம்பு
  • அலகில – அளவற்ற
  • தொக்க விலங்கு – விலங்குத்தொகுதி
  • குரலை – புறம் பேசுதல்
  • வெஃகல் – விரும்புதல்
  • வெகுளல் – சினத்தல்
  • சீலம் – ஒழுக்கம்
  • தானம் – கொடை
  • கேண்மின் – கேளுங்கள்
  • உய்ம்மின் – போற்றுங்கள்
  • உறைதல் – தங்குதல்
  • கூற்று – எமன்
  • மாசில் – குற்றமற்ற
  • புக்கு – புகுந்து
  • இடர் – இன்னல்
  • இலக்கணக்குறிப்பு:

    .
  • தேவியும் ஆயமும் – எண்ணும்மை
  • அருந்தவர், நல்வினை – பண்புத்தொகை
  • வாழ்க – வியங்கோள் வினைமுற்று
  • செய்தவம், வீழ்கதிர் – வினைத்தொகை
  • பெரும்பேறு – பண்புத்தொகை
  • பல்லுயிர், நல்வினை, தீவினை, பேரின்பம் – பண்புத்தொகை
  • ஆய்தொடி நல்லாய் – இரண்டாம் வெறுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • கம்மத்தீ – உருவகம்
  • பொல்லக்காட்சி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • பிரித்தறிதல்:

    .
  • எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
  • அறிவுண்டாக = அறிவு + உண்டாக
  • இயல்பீராறு = இயல்பு + ஈறு + ஆறு
  • நன்மொழி = நன்மை + மொழி
  • எனக்கிடர் = எனக்கு + இடர்
  • நல்லறம் = நன்மை + அறம்
  • ஆசிரியர் குறிப்பு:

    .
  • மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
  • சாத்தன் என்பது இவரின் இயற் பெயர்.
  • இவர் திருச்சியில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்.
  • தானிய வாணிகம் செய்தவர்.
  • தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்நூர்புலவன் என்று இளங்கோவடிகள் இவரை பாராட்டியுள்ளார்.
  • இவரது காலம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
  • நூல் குறிப்பு:

    .
  • இந்நூல் ஐம்பெரும்காபியங்க்களுள் ஒன்று.
  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒரே கதை தொடர்பு உடையவை.
  • இவை இரண்டும் “இரட்டை காப்பியங்கள்” என அழைக்கப்படும்.
  • இந்நூலுக்கு “மணிமேகலை துறவு” என்ற பெயரும் உண்டு.
  • இந்நூல் பௌத்த சமயச் சார்பு உடையது.
  • முப்பது காதைகள் கொண்டது. இருபத்தி நான்காவது காதை என்பது ஆபுத்திரன் நாடு அடைந்த காதை ஆகும்.
  • உமர் கய்யாம் பாடல்கள்

    அன்பு சியின் அயலாரும்
    அண்டி நெருங்கும் உறவினராம்;
    அன்பு நீங்கின் உறவினரும்
    அகன்று நிற்கும் அயலரவாம்;
    தும்ப நோயை நீக்கிடுமேல்
    துவ்வா விடமும் அமுதமாகும்;
    துன்ப நோயை ஆக்கிடுமேல்
    தூய அமுதம் விடமாமே!

    சொற்பொருள்:

    .
  • பகர்வது – சொல்வது
  • தெளிவீரே – தெளியுங்கள்
  • துவ்வா – நுகராத
  • அகன்று – விலகி
  • ஆழி – கடல்
  • இலக்கணக்குறிப்பு:

    .
  • நோக்கா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • நோக்கி – வினையெச்சம்
  • துவ்வா விடம் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • ஆசிரியர் குறிப்பு:

    .
  • கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் = சிவதாணு, ஆதிலட்சுமி அம்மையார்.
  • இவர் உமர்கய்யாம் பாடல்களை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
  • உமர்கய்யாம் பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக கவிஞர்.
  • இவரின் முழுப்பெயர் கியதுதின் அபுல்பாத் உமர்கய்யாம் என்பது.
  • இயற்றிய நூல்கள்:

    .
  • மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி
  • நூல் குறிப்பு:

    .
  • இந்நூல் இம்மை மறுமை பற்றி ரூபாயத் என்னும் பெயரில் உமர்கய்யாம் எழுதிய செய்யுளின் மொழிபெயர்ப்பு.
  • கவிமணி இதனை மொழிபெயர்த்துள்ளார்.
  • இதில் 115 பாடல்கள் உள்ளன.
  • ரூபாயத் என்பது நான்கடிச் செய்யுள்.
  • உணவே மருந்து

    .
  • தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அணைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது.
  • பசியின் கொடுமையை “பசிப்பிணி என்னும் பாவி” என மணிமேகலை கூறுகிறது.
  • “உண்டி கொடுதோர் உயிர் கொடுத்தோரே” என மணிமேகலையும், புறநானூறும் கூறுகின்றன.
  • திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாக கூறியுள்ளார்.
  • நம் நாட்டு சமையலுக்கு புழுங்கல் அரிசியே சிறந்தது.
  • நோய்க்கு முதல் காரணம் உப்பு.
  • “மீதூண் விரும்பேல்” என்றவர் ஔவை.
  • நோய் நீக்கும் மூலிகைகள்

    துளசி:

    .
  • துளசி செடியின் இலைகளை நீரில்இட்டு கொதிக்க செய்து ஆவி பிடித்தால் மார்புசளி, நீர்க்கோவை, தலைவலி நீங்கும்.
  • துளசி இலைகள் பூசினால் படை நீங்கும்.
  • கீழ்க்காய்நெல்லி:

    .
  • இதனை கீழாநெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் கூறுவர்.
  • மஞ்சட் காமாலைக்கு கைகண்ட மருந்தாக பயன்படுகிறது.
  • இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.
  • தூதுவளை:

    .
  • இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது.
  • இக்கொடியில் சிறு முள்கள் உண்டு.
  • இதனை தூதுளை, சிங்கவல்லி என்றும் அழைப்பர்.
  • வள்ளலார் இதனை “ஞானப்பச்சிலை” என்று கூறுவார்.
  • இது குறள் வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீடிக்கும்.
  • குப்பைமேனி:

    .
  • குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்து.
  • இதனை “மேனி துலங்க குப்பைமேனி” என்று சிறபிப்பர்.
  • கற்றாழை:

    .
  • இது வறண்ட நிலத்தாவரம்.
  • இதனை “குமரி” என்பர்.
  • பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்பர்.
  • முருங்கை:

    .
  • இதனை அரைத்து தடவினால் எலும்பு முறிவு விரைவில் கூடும்.
  • இரும்பு சத்து நிறைந்துள்ளதால் கூந்தலை வளரச் செய்வதில் பெரும் பங்கு உண்டு.
  • கறிவேப்பிலலை:

    .
  • இது சீதபேதி, நச்சு போன்றவற்றை சரிசெய்யும்.
  • கரிசலாங்கண்ணி:

    .
  • இரத்தசோகை, செரிமான கோளாறு, மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து.
  • கண் பார்வையை தெளிவாக்கும்.
  • நரையை போக்கும்.
  • இதனை “கரிசாலை, கையாந்தகரை, பிருங்கராசம், தேகராசம்” என்று கூறுவர்.
  • பிற மூலிகைகள்:

    .
  • மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண்னையும், குடற்புண்ணையும் குணபடுத்தும்.
  • அகத்திக்கீரை பல் சார்ந்த நோய்களை குணமாக்கும்.
  • வல்லாரை நினைவாற்றலை பெருக்க உதவும்.
  • திருக்குறள்

    சொற்பொருள்:

    .
  • கடன் – கடமை
  • நாண் – நாணம்
  • ஒப்பரவு – உதவுதல்
  • வாய்மை – உண்மை
  • சால்பு – சான்றாண்மை
  • ஆற்றல் – வலிமை
  • மாற்றார் – பகைவர்
  • கட்டளை – உரைகல்
  • இனிய – நன்மை
  • திண்மை – வலிமை
  • ஆழி – கடல்
  • இருநிலம் – பெரிய நிலம்
  • .
  • பொறை – சுமை
  • இலக்கணக்குறிப்பு:

    .
  • என்ப – பலர்பால் வினைமுற்று
  • மேற்கொள்பவர் – வினையாலணையும் பெயர்
  • உள்ளததூஉம் – இன்னிசையளபடை
  • அன்று – குறிப்பு வினைமுற்று
  • கண்ணோட்டம் – தொழிற்பெயர்
  • கொல்லா, சொல்லா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • பணிதல் – தொழிற்பெயர்
  • ஆற்றுவார், மாற்றார் – வினையாலணையும் பெயர்
  • இன்மை, திண்மை – பண்புப்பெயர்
  • சான்றவர் – வினையாலணையும் பெயர்
  • இருநிலம் – உரிச்சொற்றொடர்
  • இன்பம்

    கற்றவர் முன்தாம் கற்ற
    கல்வியைக் கூறல் இன்பம்
    வெற்றியை வாழ்வில் சேர்க்கும்
    வினைபல புரிதல் இன்பம்
    சிற்றினக் கயவ ரோடு
    சேராது வாழ்தல் இன்பம்
    பெற்றதை வழங்கி வாழும்
    பெருங்குணம் பெறுதல் இன்பம்.
    - சுரதா

    சொற்பொருள்:

    .
  • இசைபட – புகழுடன்
  • கயவர் – கீழ்க்குணமுடையோர்
  • இலக்கணக்குறிப்பு:

    .
  • தளிர்க்கை – உவமைத்தொகை
  • பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் – பண்புத்தொகை
  • வழங்கி – வினையெச்சம்
  • கற்றல், பெறுதல், வாழ்தல் – தொழிற்பெயர்
  • ஆசிரியர் குறிப்பு:

    .
  • உவமை கவிஞர் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன்.
  • இவர் நாகை மாவட்டம் பழையனூரில் பிறந்தார்.
  • பெற்றோர் = திருவேங்கடம், செண்பகம்.
  • பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா.
  • படைப்புகள்:

    .
  • தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்
  • சிறப்பு;

    .
  • இவரின் தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கானப் பரிசை பெற்றுள்ளது.
  • இவர் கலைமாமணி பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்.

  •